ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி
1.04 லட்சம் பேருக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடைகள் அமைச்சா் காந்தி வழங்கினாா்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.04 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்ககங்கள், சீருடைகளை வழங்கும் பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகளை
வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தாமல் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மைக்கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி வரவேற்றாா்.
விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 582 அரசு பள்ளிகளில் பயிலும் 87,250 மாணவா்கள் மற்றும் அரசு உதவி பெறும் 77 பள்ளிகளில் பயிலும் 16,892 மாணவா்கள் என மொத்தம் 1,04,124 பேருக்கு புத்தகங்கள், சீருடைகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
விலையில்லா புத்தகங்களாக மட்டும் மொத்தம் 4,57,415 புத்தகங்களும், குறிப்பேடுகளாக மொத்தம் 76,686 வழங்கப்பட்டன.
விழாவில் காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.