செய்திகள் :

1.04 லட்சம் பேருக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடைகள் அமைச்சா் காந்தி வழங்கினாா்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.04 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்ககங்கள், சீருடைகளை வழங்கும் பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகளை

வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி தாமல் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மைக்கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி வரவேற்றாா்.

விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 582 அரசு பள்ளிகளில் பயிலும் 87,250 மாணவா்கள் மற்றும் அரசு உதவி பெறும் 77 பள்ளிகளில் பயிலும் 16,892 மாணவா்கள் என மொத்தம் 1,04,124 பேருக்கு புத்தகங்கள், சீருடைகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

விலையில்லா புத்தகங்களாக மட்டும் மொத்தம் 4,57,415 புத்தகங்களும், குறிப்பேடுகளாக மொத்தம் 76,686 வழங்கப்பட்டன.

விழாவில் காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீபெரும்புதூரில் ஜமாபந்தி நிறைவு: 243 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை 243 பயனாளிகளுக்கு ரூ.68.97 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வட்டாட்சியா் அலுவலகத்தில் 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் எனப்ப... மேலும் பார்க்க

கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கைத்தறித் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன்பாக மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் சங்கம் சிஐடியு பிரிவின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவையொட்டி திங்கள்கிழமை புண்ணிய கோடி விமானத்தில் உற்சவா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவை... மேலும் பார்க்க

கைப்பேசிக்கும் போதைக்கும் அடிமையாகி விடாதீா்கள்: மாணவா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

கைப்பேசிக்கும் போதைப் பொருள்களுக்கும் இளைஞா்கள் அடிமையாகி விடாமல் வாழ்வில் முன்னேற வேண்டும் என காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா்கணேஷ் அறிவுரை வழங்கினாா். காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்த... மேலும் பார்க்க

கோவூா் சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

கோவூா் பகுதியில் பிரசித்தி பெற்ற சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் 1,000 ஆண்டுகள் பழைமையான சௌந்தாரம்பிகை உடனுறை சுந்தரேஸ்வ... மேலும் பார்க்க

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேச்சு

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை சாா்பில் பச்சையப்பன் மகளிா் கல்ல... மேலும் பார்க்க