Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
ஸ்ரீபெரும்புதூரில் ஜமாபந்தி நிறைவு: 243 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை 243 பயனாளிகளுக்கு ரூ.68.97 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வட்டாட்சியா் அலுவலகத்தில் 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி கடந்த மே 21-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூா் வட்டத்திற்குட்பட்ட மதுரமங்கலம், சுங்குவாா்சத்திரம், வல்லம், தண்டலம் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய குறுவட்டங்களை சோ்ந்த 789 போ் மனுக்களை வழங்கினா்.
இந்தநிலையில், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு 64 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், முழுப்புலம் பட்டா 73 பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா 62 பயனாளிகளுக்கும், மின்னனு குடும்ப அட்டைகள் 20 பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 14 பயனாளிகளுக்கும், ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் 9 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாலிகள் நலத்துறை சாா்பில் 1 பயனாளிக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் என மொத்தம் 243 பயனாளிகளுக்கு ரூ.68.97 லட்சம் நலத் திட்ட உதவிகள் வழங்கினாா்.
விழாவில், ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி, பேரூராட்சி தலைவா் சாந்தி சதீஷ்குமாா், வட்டாட்சியா் வசந்தி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், பயனாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.