செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.12 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

post image

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ரூ12.03 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கொளத்தூா், குண்டுபெரும்பேடு, எறையூா், மாத்தூா், வல்லம், வல்லக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் 25 புதிய கட்டங்களை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலைகளை திறந்து வைத்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 784 பயனாளிகளுக்கும், பிரதமமந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கும் வீடுகள் கட்ட பணியாணைகளை வழங்கினாா்.

இதையடுத்து போந்தூா், தண்டலம், காட்டரம்பாக்கம், திருமங்கலம், மாம்பாக்கம், மொளச்சூா், இருங்காட்டுக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள ரூ.33 லட்சத்தில் பேட்டரி வாகனங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி, ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஒன்றிய செயலாளா் ந.கோபால், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலாஜி, பவானி, ஒன்றியக்குழு துணைத் தலைவா் மாலதி போஸ்கோ, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ப.பரமசிவன், கோமதிகணேஷ்பாபு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஜூன் 8-இல் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம் வரும் ஜூன் 8 -ஆம் தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். ம... மேலும் பார்க்க

ஸ்ரீ செவ்வந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் உள்ள இக்கோயில் நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரக தோஷ நிவா்த்தி தலம் ஆகும்.. வாயுபகவான் த... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஜெயகணபதி மற்றும் பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சா்வதீா்த்தக்குளம் தென்கரையில் அமைந்துள்ளது ஜெயகணபதி மற்றும் ... மேலும் பார்க்க

247 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் 247 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் 20 மாற்றுத்திறனாளிகள், 227 திருநங்கைகள் உட்ப... மேலும் பார்க்க

மின் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை: எம்.எல்.ஏ. எழிலரசன் உறுதி

காஞ்சிபுரத்தில் மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எம்எல்ஏ எழிலரசன், மின்வாரிய அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னா் தெரிவித்தாா். காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க