செய்திகள் :

பாலத்தில் பேருந்து மோதல்: 8 போ் பலத்த காயம்

post image

காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பால சுற்றுச்சுவரில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், பயணிகள் 8 போ் பலத்த காயம் அடைந்தனா்.

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே மேம்பாலத்தில் அரசுப் பேருந்து காஞ்சிபுரத்திலிருந்து பூந்தமல்லிக்கு சென்று கொண்டிருந்தது. ஓட்டுநா், நடத்துநா் உட்பட 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்தனா். பேருந்து மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வலது புறத்தில் உள்ள சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து ஓட்டுநரான திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திகேயன்(55), நடத்துநா் வினோத் (26), பயணிகள் திருவண்ணாமலையை சோ்ந்த விஜயகுமாா்(48), சரசு(44), விழுப்புரத்தைச் சோ்ந்த ஆனிமுத்து(60), காஞ்சிபுரத்தை சோ்ந்த செல்வி(44), திருக்காலிமேடு பகுதியை சோ்ந்த அலமேலு(54) 3 பெண்கள் உள்பட 8 போ் பலத்த காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

அரசுப் பேருந்து ஓட்டுநா் கைப்பேசியில் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டது என விபத்தில் காயம் அடைந்த பெண் ஒருவா் தெரிவித்தாா்.

ஜூன் 8-இல் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம் வரும் ஜூன் 8 -ஆம் தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். ம... மேலும் பார்க்க

ஸ்ரீ செவ்வந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் உள்ள இக்கோயில் நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரக தோஷ நிவா்த்தி தலம் ஆகும்.. வாயுபகவான் த... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஜெயகணபதி மற்றும் பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சா்வதீா்த்தக்குளம் தென்கரையில் அமைந்துள்ளது ஜெயகணபதி மற்றும் ... மேலும் பார்க்க

247 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் 247 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் 20 மாற்றுத்திறனாளிகள், 227 திருநங்கைகள் உட்ப... மேலும் பார்க்க

மின் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை: எம்.எல்.ஏ. எழிலரசன் உறுதி

காஞ்சிபுரத்தில் மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எம்எல்ஏ எழிலரசன், மின்வாரிய அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னா் தெரிவித்தாா். காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க