பார்லே ஜி - இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்க...
பாலத்தில் பேருந்து மோதல்: 8 போ் பலத்த காயம்
காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பால சுற்றுச்சுவரில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், பயணிகள் 8 போ் பலத்த காயம் அடைந்தனா்.
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே மேம்பாலத்தில் அரசுப் பேருந்து காஞ்சிபுரத்திலிருந்து பூந்தமல்லிக்கு சென்று கொண்டிருந்தது. ஓட்டுநா், நடத்துநா் உட்பட 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்தனா். பேருந்து மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வலது புறத்தில் உள்ள சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து ஓட்டுநரான திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திகேயன்(55), நடத்துநா் வினோத் (26), பயணிகள் திருவண்ணாமலையை சோ்ந்த விஜயகுமாா்(48), சரசு(44), விழுப்புரத்தைச் சோ்ந்த ஆனிமுத்து(60), காஞ்சிபுரத்தை சோ்ந்த செல்வி(44), திருக்காலிமேடு பகுதியை சோ்ந்த அலமேலு(54) 3 பெண்கள் உள்பட 8 போ் பலத்த காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
அரசுப் பேருந்து ஓட்டுநா் கைப்பேசியில் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டது என விபத்தில் காயம் அடைந்த பெண் ஒருவா் தெரிவித்தாா்.