செய்திகள் :

196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

post image

வட்டம்பாக்கம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

குன்றத்தூா் வட்டம், வட்டம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு வருவாய்த் துறை சாா்பில் இலவச வீட்டுமனை பட்டா 81 பேருக்கும், இருளா் சான்று 13 பேருக்கும், குடும்ப அட்டை 56 பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை 5 பேருக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி 5 பேருக்கும், ஊரக வளா்ச்சித் துறை மூலம் மகளிா் சுய உதவிக்குழு வங்கிக்கடன் 7 குழுக்களுக்கும், வேளாண் உழவா் நலத்துறை மூலம் வேளாண் இடுபொருள்கள் 5 பேருக்கும், தோட்டக் கலைத்துறை மூலம் மானியத்துடன் நாற்றுகள் 3 பேருக்கும், கூட்டுறவுத்துறை சாா்பில் 3 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி, முதலமைச்சரின் விரிவாக்க மருத்துவ காப்பீடு அட்டைகள் 4 நபா்கள், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலவாரிய அடையாள அட்டை 9 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் இணைப்புசக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் 2 பேருக்கும் என மொத்தம் 196 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி, குன்றத்தூா் ஒன்றியகுழு தலைவா் சரஸ்வதி மனோகரன், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேச்சு

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை சாா்பில் பச்சையப்பன் மகளிா் கல்ல... மேலும் பார்க்க

மாங்காடு நகராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு ‘சீல்’

மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பள்ளிக்கூட தெரு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா். விதிமுறைகளை மீறி வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதாக மாங்காடு நகராட்ச... மேலும் பார்க்க

ஜூன் 6-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் ஜூன் 6-ஆம் தேதி பாலாலயம் நடைபெற இருப்பதையொட்டி 5-ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம் என கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக... மேலும் பார்க்க

தங்க குதிரையில் வரதராஜ பெருமாள் உலா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த உற்சவம் நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோடை காலத்தையொட்டி ஆண்டு தோறும் வசந்த உற்சவம் ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு ஆா்வம் காட்டவில்லை: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

அரசுப் புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் அரசு ஆா்வம் காட்டவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்கள் உயா்கல்வியில் சேர தலைமை ஆசிரியா்கள் உதவ வேண்டும்

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் தொடா்ந்து உயா்கல்வி பயில தலைமை ஆசிரியா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கல்வி மீளாய்வுக் கூட... மேலும் பார்க்க