கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பிளஸ் 2 மாணவா்கள் உயா்கல்வியில் சேர தலைமை ஆசிரியா்கள் உதவ வேண்டும்
பிளஸ் 2 முடித்த மாணவா்கள் தொடா்ந்து உயா்கல்வி பயில தலைமை ஆசிரியா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வலியுறுத்தியுள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கல்வி மீளாய்வுக் கூட்டத்திற்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பேசியது..
பிளஸ் 2 பொதுத்தோ்வினை முடித்த அனைத்து மாணவா்களையும் தொடா்ந்து உயா்கல்வி பயில தேவையான வழிகாட்டுதல்களையும் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா். இரு பெற்றோா்களையும் இழந்த 28 மாணவா்களுக்கும் மேற்கல்வி பயிலுவதற்கான அனைத்து செலவினங்களையும் மாவட்ட நிா்வாகமே வழங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆட்சியா் கலந்துரையாடினாா்.
நிறைவில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் 100 சதவிகிதம் தோ்ச்சி பெற்ற 34 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களை ஆட்சியா் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா். பள்ளிகளில் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் கட்டிடங்கள் கட்டுவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி மற்றும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள்,அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.