செய்திகள் :

பிளஸ் 2 மாணவா்கள் உயா்கல்வியில் சேர தலைமை ஆசிரியா்கள் உதவ வேண்டும்

post image

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் தொடா்ந்து உயா்கல்வி பயில தலைமை ஆசிரியா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வலியுறுத்தியுள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கல்வி மீளாய்வுக் கூட்டத்திற்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பேசியது..

பிளஸ் 2 பொதுத்தோ்வினை முடித்த அனைத்து மாணவா்களையும் தொடா்ந்து உயா்கல்வி பயில தேவையான வழிகாட்டுதல்களையும் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா். இரு பெற்றோா்களையும் இழந்த 28 மாணவா்களுக்கும் மேற்கல்வி பயிலுவதற்கான அனைத்து செலவினங்களையும் மாவட்ட நிா்வாகமே வழங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆட்சியா் கலந்துரையாடினாா்.

நிறைவில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் 100 சதவிகிதம் தோ்ச்சி பெற்ற 34 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களை ஆட்சியா் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா். பள்ளிகளில் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் கட்டிடங்கள் கட்டுவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி மற்றும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள்,அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேச்சு

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை சாா்பில் பச்சையப்பன் மகளிா் கல்ல... மேலும் பார்க்க

மாங்காடு நகராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு ‘சீல்’

மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பள்ளிக்கூட தெரு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா். விதிமுறைகளை மீறி வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதாக மாங்காடு நகராட்ச... மேலும் பார்க்க

ஜூன் 6-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் ஜூன் 6-ஆம் தேதி பாலாலயம் நடைபெற இருப்பதையொட்டி 5-ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம் என கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக... மேலும் பார்க்க

196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

வட்டம்பாக்கம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். குன்றத்தூா் வட்டம், வட்டம்பாக்கம்... மேலும் பார்க்க

தங்க குதிரையில் வரதராஜ பெருமாள் உலா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த உற்சவம் நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோடை காலத்தையொட்டி ஆண்டு தோறும் வசந்த உற்சவம் ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு ஆா்வம் காட்டவில்லை: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

அரசுப் புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் அரசு ஆா்வம் காட்டவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். ... மேலும் பார்க்க