செய்திகள் :

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

post image

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார்.

கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது ஊருக்குக் கிளம்பினார். தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை அருகில் வந்த போது, பின்னால் வந்த கார், ரவிராஜ்குமாரின் பைக்  மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார். ரவிராஜ்குமார் மீது மோதிய கார் அதே தேசிய நெடுஞ்சாலையில் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

விபத்தில் உயிரிழந்த ரவிராஜ்குமார்
விபத்தில் உயிரிழந்த ரவிராஜ்குமார்

இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

விபத்து ஏற்படுத்திச் சென்ற கார் சிறிது தூரம் சென்றபோது அந்தக் காரில் உள்ள நம்பர் பிளேட் துணியால் மறைக்கப்பட்டுச் சென்ற போதிலும், அந்தக் காரின் நிறத்தை வைத்து அக்காரைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த கார், ஒரு லாரியில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியில் ஏற்றிச் செல்வதை, அங்குள்ள சி.சி.டிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் கண்டுபிடித்தனர்.

இது குறித்து அந்த லாரியின் பதிவெண்ணை வைத்து அக்காரின் உரிமையாளரான அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடியைச் சேர்ந்த க.சோலைச்சாமி என்பவரைப்  பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர்.

விசாரணையில், அந்த காரை எட்டையபுரம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கியதாகக் கூறியுள்ளார்.

சந்தேகத்தின்பேரில் தர்மராஜைக் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், குறுக்குச்சாலையில் விபத்து ஏற்படுத்திச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.  

விபத்து வழக்கில் போலீஸாரிடம் சிக்காமல் இருக்க அந்தக் காரை அருண்குமார், சுப்பாராஜ் ஆகியோர் உதவியுடன் காரை கார் புரோக்கரான சோலைச்சாமிக்கு விற்பனை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

அந்தக் கார் விபத்தில் இருந்து தப்பிக்க தரம்ராஜ், சோலைச்சாமி இருவரும் விபத்து நடந்த இரு நாட்களுக்கு முன்பு விற்பனை செய்துவிட்டதாக ஒப்பந்தப் பத்திரம் தயார்ப்படுத்தியது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தரமராஜ், சோலைச்சாமி, அருண்குமார், சுப்பாராஜ் ஆகியோரைக் கைது செய்ததுடன், கார் மற்றும் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் நகை, 1.50 லட்சம் பணம் கையாடல்- உதவி ஆய்வாளர் கைது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அன... மேலும் பார்க்க

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் கா... மேலும் பார்க்க

"குழந்தைகள் உடலில் சாத்தான்" - மகன்களை ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்த பாஸ்டர் தந்தை கைது; நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி(42).இவர் அந்தப் பகுதியில் உள்ள ரசல்ராஜ் அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி சஜினி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகைக்குக் குடியிர... மேலும் பார்க்க