செய்திகள் :

Aamir Khan: `மகாபாரதம்' படத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கா? - நடிகர் ஆமீர் கான் சொல்வது என்ன?

post image

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தற்போது தனது புதிய படமான சிதாரே ஜமீன் பர் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார்.

இப்படம் வரும் 20-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், டிவி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆமீர் கான் தனது அடுத்த கனவு படமான மகாபாரதம் குறித்து விரிவாக பேசினார்.

இதில் அவர் கூறுகையில், ''மகாபாரதம் பல அடுக்குகள், உணர்ச்சிகளை கொண்டது. நீங்கள் உலகத்தில் பார்க்கும் அனைத்தையும் மகாபாரதத்தில் பார்ப்பீர்கள். மகாபாரதம் கதை பல ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது. அதனை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எப்போதும் எனது கனவாக இருந்தது'' என்றார்.

உங்களது கடைசிப்படம் எதுவாக இருக்கும் என்று கேட்டதற்கு, மகாபாரத்தை பண்ணிய பிறகு வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை.

அப்படத்திற்கு பிறகு என்னால் வேறு எதையும் செய்ய முடியாது. ஆனால் நீங்கள் கேட்பதால், இதுதான் எனக்கு யோசிக்கக்கூடிய ஒரே விஷயமாக இருக்கிறது. இதற்குப் பிறகு, நான் வேறு எதுவும் செய்யத் தேவையில்லை என்று நினைப்பேன். நான் காலனியுடன் இறப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்றார்.

ஆமீர் கான்

இதற்கு முன்பும் ஆமீர் கான் அளித்திருந்த பேட்டியில், மகாபாரதம் தனது கனவு திட்டம் என்றும், ஆனால் அதில் தான் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கதாபாத்திரத்திற்கு தக்கபடி நடிகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்படத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் தேவை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

ஆமீர் கான் இதற்கு முன்பு நடத்த `லால் சிங் சத்தா' படம் பெரிய அளவில் வசூலை கொடுக்கவில்லை. அதோடு சமீபத்தில் தனது புதிய லைஃப் பார்ட்னரை ஆமீர் கான் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆமீர் கான் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான கெளரி என்ற பெண்ணை தனது புதிய வாழ்க்கை துணையாக இணைந்துள்ளார்.

Madhavan: தகர்ந்த ராணுவ கனவு; கைகொடுத்த சினிமா; மாதவன் நடிகரான கதை!

நடிகர் ஆர்.மாதவன் ஆரம்பத்தில் இந்தி படங்களில் நடித்தபோதிலும், தமிழில் நடித்த பிறகுதான் பிரபலமானார். ஆர்.மாதவன் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் நடிகராக மாறியது வித்தியாசமான ஒரு அனுபவம்... மேலும் பார்க்க

"கன்னித்தன்மையுள்ள மனைவியை எதிர்பார்க்காதீர்" - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் பழைய பேட்டி

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார்.பாலிவுட்டைத் தொடர்ந்து இப்போது அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவி... மேலும் பார்க்க

``தலைசிறந்த ஆன்மிக நகரில் எனது வீடு.." - அயோத்தி ராமர் கோயில் அருகில் நிலம் வாங்கிய அமிதாப்பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். ஏராளமான வீடு மற்றும் அலுவலகங்களை வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்.மும்பைக்கு அடுத்த படியாக தனது சொந்த... மேலும் பார்க்க

Spirit படத்தில் நடிக்க ரூ.20 கோடி? தீபிகா படுகோனேவுக்குப் பதில் டிம்ரியை ஒப்பந்தம் செய்த சந்தீப்

தனது ஸ்பிரிட் படத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுடன் தெலுங்கு பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.இதில் நடிக்கவும் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். அதேசமயம் தீபிகா... மேலும் பார்க்க

`இது நம் கடமை துணை நிற்போம்' மறைந்த ராணுவ வீரர்களுக்காக ப்ரீத்தி ஜிந்தா செய்த நற்செயல்

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மறைந்த ராணுவ வீரர்களின் மனைவி, குழந்தைகளுக்காக ரூ.1.10 கோடி வழங்கி இருக்கிறார். மறைந்த ராணுவ வீரர்களின் குடும்ப ந... மேலும் பார்க்க

Bollywood: நண்பரின் Real Estate நிறுவனத்தில் முதலீடு செய்த அமிதாப்பச்சன், ஷாருக்கான்; பின்னணி என்ன?

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் அமிதாப்பச்சன் அதிக அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யக்கூடியவர். ஏற்கவே மும்பையில் ஏராளமான அலுவலகங்கள், பிளாட்களை வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதித்து... மேலும் பார்க்க