Muththa Mazhai பாட்டைக் கேட்டு 'கவிஞன் ஆகிட்டான்'னு Mani Ratnam பாராட்டினார்! -L...
Aamir Khan: `மகாபாரதம்' படத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கா? - நடிகர் ஆமீர் கான் சொல்வது என்ன?
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தற்போது தனது புதிய படமான சிதாரே ஜமீன் பர் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார்.
இப்படம் வரும் 20-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், டிவி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆமீர் கான் தனது அடுத்த கனவு படமான மகாபாரதம் குறித்து விரிவாக பேசினார்.

இதில் அவர் கூறுகையில், ''மகாபாரதம் பல அடுக்குகள், உணர்ச்சிகளை கொண்டது. நீங்கள் உலகத்தில் பார்க்கும் அனைத்தையும் மகாபாரதத்தில் பார்ப்பீர்கள். மகாபாரதம் கதை பல ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது. அதனை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எப்போதும் எனது கனவாக இருந்தது'' என்றார்.
உங்களது கடைசிப்படம் எதுவாக இருக்கும் என்று கேட்டதற்கு, மகாபாரத்தை பண்ணிய பிறகு வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை.
அப்படத்திற்கு பிறகு என்னால் வேறு எதையும் செய்ய முடியாது. ஆனால் நீங்கள் கேட்பதால், இதுதான் எனக்கு யோசிக்கக்கூடிய ஒரே விஷயமாக இருக்கிறது. இதற்குப் பிறகு, நான் வேறு எதுவும் செய்யத் தேவையில்லை என்று நினைப்பேன். நான் காலனியுடன் இறப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்றார்.

இதற்கு முன்பும் ஆமீர் கான் அளித்திருந்த பேட்டியில், மகாபாரதம் தனது கனவு திட்டம் என்றும், ஆனால் அதில் தான் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கதாபாத்திரத்திற்கு தக்கபடி நடிகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்படத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் தேவை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
ஆமீர் கான் இதற்கு முன்பு நடத்த `லால் சிங் சத்தா' படம் பெரிய அளவில் வசூலை கொடுக்கவில்லை. அதோடு சமீபத்தில் தனது புதிய லைஃப் பார்ட்னரை ஆமீர் கான் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆமீர் கான் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான கெளரி என்ற பெண்ணை தனது புதிய வாழ்க்கை துணையாக இணைந்துள்ளார்.