செய்திகள் :

``தலைசிறந்த ஆன்மிக நகரில் எனது வீடு.." - அயோத்தி ராமர் கோயில் அருகில் நிலம் வாங்கிய அமிதாப்பச்சன்

post image

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். ஏராளமான வீடு மற்றும் அலுவலகங்களை வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்.

மும்பைக்கு அடுத்த படியாக தனது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் பக்கம் அமிதாப்பச்சனின் பார்வை திரும்பி இருக்கிறது.

அமிதாப்பச்சன் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை சுற்றி தொடர்ந்து நிலம் வாங்கி வருகிறார். தற்போது புதிதாக ராமர் கோயில் அருகில் ரூ.40 கோடியில் 25 ஆயிரம் சதுர அடி நிலத்தை வாங்கி இருக்கிறார். இந்த நிலத்தில் அமிதாப்பச்சன் தனது வீட்டை கட்ட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்க செய்தியில், ''பாரம்பரியமும் நவீனத்துவமும் இணைந்திருக்கும் அயோத்தியின் ஆன்மாவுக்குள் இதயப்பூர்வமான பயணத்தின் தொடக்கம் இது. உலகின் தலைசிறந்த ஆன்மிகத் தலைநகரில் எனது வீட்டைக் கட்ட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமிதாப்பச்சன் அயோத்தியில் ஏற்கெனவே மூன்று இடங்களில் நிலம் வாங்கி இருக்கிறார். அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் முன்பாக ரூ.4.54 கோடிக்கு 5372 சதுர அடி நிலத்தை வாங்கினார்.

அதன் பிறகு சராயு நிறுவனம் மேம்படுத்திய நிலத்தில் ரூ.14.50 கோடிக்கு நிலத்தை வாங்கினார். அதோடு அயோத்தியில் 54 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் அமிதாப்பச்சன் வாங்கி இருக்கிறார். அந்த நிலத்தில் அமிதாப்பச்சன் தனது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சனுக்கு நினைவுச்சின்னம் கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமிதாப்பச்சன்

தற்போது அமிதாப்பச்சன் வாங்கி இருக்கும் நிலத்தையும் சராயு நிறுவனம்தான் மேம்படுத்தி விற்பனை செய்துள்ளது.

அயோத்தியில் இருந்து அமிதாப்பச்சனின் சொந்த ஊரான பிரயக்ராஜ் நகரத்திற்கு எளிதில் சென்றுவிட முடியும். எனவேதான் ஆன்மிக நகரில் தொடர்ந்து அமிதாப்பச்சன் நிலத்தில் பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறார்.

அமிதாப்பச்சன் அடுத்ததாக செக்‌ஷன் 84 படத்தில் நடிக்கிறார். அதோடு பிரமாஸ்தரா மற்றும் கல்கி 2898 ஏடி என்ற படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். இது தவிர கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியையும் நடத்த இருக்கிறார்.

Spirit படத்தில் நடிக்க ரூ.20 கோடி? தீபிகா படுகோனேவுக்குப் பதில் டிம்ரியை ஒப்பந்தம் செய்த சந்தீப்

தனது ஸ்பிரிட் படத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுடன் தெலுங்கு பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.இதில் நடிக்கவும் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். அதேசமயம் தீபிகா... மேலும் பார்க்க

`இது நம் கடமை துணை நிற்போம்' மறைந்த ராணுவ வீரர்களுக்காக ப்ரீத்தி ஜிந்தா செய்த நற்செயல்

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மறைந்த ராணுவ வீரர்களின் மனைவி, குழந்தைகளுக்காக ரூ.1.10 கோடி வழங்கி இருக்கிறார். மறைந்த ராணுவ வீரர்களின் குடும்ப ந... மேலும் பார்க்க

Bollywood: நண்பரின் Real Estate நிறுவனத்தில் முதலீடு செய்த அமிதாப்பச்சன், ஷாருக்கான்; பின்னணி என்ன?

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் அமிதாப்பச்சன் அதிக அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யக்கூடியவர். ஏற்கவே மும்பையில் ஏராளமான அலுவலகங்கள், பிளாட்களை வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதித்து... மேலும் பார்க்க

மும்பை: நடிகர் சல்மான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் கைது.. மடக்கி பிடித்த போலீஸார்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை பாந்திராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்ட் என்ற கட்டிடத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சல்மான்கானை கொலை செய்ய முயற்சி நடந்தது. சல்மான்கான் வீட்டின் மீது குஜராத் ச... மேலும் பார்க்க

KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

Qlமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார் முன்னணி நடிகர் தனுஷ். ஆதிபுருஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு கலா... மேலும் பார்க்க

Ananya Pandey: `கோழி கால்கள், தீக்குச்சி உடல் என கேலி செய்தார்கள்'- ஏளனங்கள் குறித்து அனன்யா பாண்டே

பாலிவுட்டில் 2019ம் ஆண்டு வெளியான `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2' திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அனன்யா பாண்டே, அவரது தோற்றத்துக்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார். இன்று, முன்னணி நடிகையாக வளர்ந்த... மேலும் பார்க்க