TVK: "என் இயல்பை மீறிய வார்த்தைகள்; வருந்துகிறேன்" - சர்ச்சை வீடியோவுக்கு ஆதவ் வ...
8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சான்ஸ்; இங்கிலாந்தில் சதத்துடன் கரியரை மீண்டும் தொடங்கிய Karun Nair!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சேவாக்குக்குப் பிறகு ஒரே இந்திய வீரராக முச்சதம் அடித்து, 8 ஆண்டுகளாக மீண்டும் ஒரு வாய்ப்புக்காகப் போராடி, கடந்த ஓராண்டாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு, இந்திய அணியில் இவரை மீண்டும் சேர்க்கவேண்டும் பலரையும் தனது பெயரை உச்சரிக்க வைத்திருப்பவர் கருண் நாயர்.
இங்கிலாந்தில் ஜூன் 20-ம் தேதி முதல் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், சர்பராஸ் கானுக்கு பதிலாக கருண் நாயருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

கிரிக்கெட்டில் இரண்டாவது வாய்ப்புக்காக இத்தனை வருடங்களாகக் காத்திருந்த கருண் நாயர், இந்தியா ஏ அணிக்கும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இங்கிலாந்தில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 24 ரன்களில் அவுட்டானதும் ஒன்டவுடனில் களமிறங்கிய கருண் நாயர், இந்திய அணியில் யாருடைய இடத்தில் தனக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறதோ அதே சர்பராஸ் கானுடன் இணைந்து 150+ ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டார்.

இருவரும் 90 ரன்களுக்கு மேல் அடித்து சத்தத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், சர்பராஸ் கான் துரதிர்ஷ்டவசமாக 92 ரன்களில் அவுட்டனார்.
இருப்பினும், கருண் நாயர் கச்சிதமாக எந்த தவறும் செய்யாமல் சதமடித்தார். மேலும், தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் கருண் நாயர் 150 ரன்களைக் கடந்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நிற்கிறார்.