செய்திகள் :

`தேமுதிக-வுக்கு இப்போது இல்லை; 2026-ல் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்படும்' - அதிமுக அறிவிப்பு

post image

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ உட்பட தமிழ்நாடு எம்.பி-க்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், காலியாகும் இடங்களுக்கு யார் யார் வேட்பாளர்கள் என்பது கடந்த சில தினங்களாகவே தி.மு.க, அ.தி.மு.க கூட்டணியில் பேசுபொருளாக இருந்தது.

இதில், தி.மு.க-வுக்கான 4 இடங்களில் 3 இடங்கள் சொந்த கட்சியைச் சேர்ந்த நபர்களுக்கும், ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்துக்கும் ஒதுக்கப்பட்டது.

பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி
பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி

மறுபக்கம், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதியின்படி தே.மு.தி.க-வுக்கு ஒரு சீட் கொடுக்கப்படும் என்பது பேசுபொருளாக இருந்தது.

இரண்டு நாள்களுக்கு முன்பு கூட, தே.மு.தி.க-வுக்கு ராஜ்ய சபா சீட் அளிக்க வேண்டியது அ.தி.மு.க-வின் கடமை என்றும், அது 2024 தேர்தலின்போதே முடிவு செய்யப்பட்டது என பிரேமலதா கூறியிருந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க-வுக்கான இரண்டு இடங்களுக்கு அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும், தே.மு.தி.க-வுக்கு இப்போது சீட் ஒதுக்கப்படவில்லையென்றாலும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருக்கிறார்.

அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ அறிக்கையிலும், "அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க தொடரும்.

2026-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலின்போது தே.மு.தி.க-வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அ.தி.மு.க வழங்கும்" என்று எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

'ஒரு நாள் Promotion' - ஓய்வுபெறும் நாளில் பதவி உயர்வு அளிக்கும் மத்திய அரசு; பின்னணி என்ன?

முதல்வன் படத்தில் அர்ஜுன் எப்படி 'ஒரு நாள் முதல்வர்' ஆவாரோ, அதேபோல, மத்திய அரசும் 'ஒரு நாள் பதவி உயர்வு' திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.என்ன திட்டம்? நீண்ட காலமாக ஒரு துறையில் பணிபுரிந்து வருபவர... மேலும் பார்க்க

Kashmir: "தேசப்பற்றுடன் இருப்பது அவ்வளவு கடினமா?" - காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்வி

காங்கிரஸின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித், கடந்த வெள்ளிக்கிழமை, இந்தோனேசியாவில் உரையாற்றி இருந்தார். அங்கே அவர், "அரசியலமைப்பு பிரிவு 370-ன் கீழ், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, இந்... மேலும் பார்க்க

DMK: "மதுரைக்காரர்கள் என்றால் திமுக தலைமைக்குப் பிடிக்காது" - செல்லூர் ராஜூ சொல்லும் காரணம் என்ன?

"மதுரையில் திமுகவின் பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.இன்று செய்தியாளர்களிடம் பே... மேலும் பார்க்க

மதராஸி கேம்ப்: "ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீதியில் தங்கும் நிலை" - BJPக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

தலைநகர் புது டெல்லியில் ஜங்க்ப்புரா பகுதியில் உள்ள மதராஸி கேம்ப் பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசித்துவரும் தமிழர்களின் வீடுகள், நீர்நிலைப் பகுதி ஆக்கிரமிப்பு என்று கூறி, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அ... மேலும் பார்க்க

'தகுதியற்ற பட்டங்கள்; தேசிய கல்விக்கொள்கையை ஏற்று தான் ஆக வேண்டும்!' - மீண்டும் அரசை சீண்டும் ஆளுநர்

தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்... மேலும் பார்க்க

"கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல்" - உதயநிதி உடல்நிலை குறித்து தமிழக அரசு என்ன சொல்கிறது?

கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட... மேலும் பார்க்க