செய்திகள் :

பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை வெட்டிய நர்ஸ் - வேலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

post image

வேலூர் முள்ளிப்பாளையம் மாங்காய் மண்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விமல்ராஜ் (வயது 30). இவரின் மனைவி நிவேதா (24). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிவேதாவுக்கு கடந்த 24-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரின் குடும்பத்தினர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அழைத்துசென்று சேர்த்தனர்.

நிவேதாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து தாயும், சேயும் பேறுகால பின்சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று நர்ஸ் ஒருவர் குளுக்கோஸ் பாட்டிலில் இருந்த ஊசியை மாற்றுவதற்காக குழந்தையின் வலது கை மணிக்கட்டுடன் ஒட்டப்பட்டிருந்த டேப்பை கத்தரிக்கோலால் வெட்டினார்.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தையின் வலது கை கட்டை விரலுடன் சேர்த்து வெட்டியதில் கட்டை விரலும் துண்டானதாகக் கூறப்படுகிறது. இதனால், குழந்தை கதறியது.

அதிர்ந்துபோன பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கிருந்த மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் அலட்சியத்தாலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதைத்தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் கையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு துண்டான விரலுடன் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இந்த விவகாரம் குறித்து, மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

``எங்களுக்கு மட்டும் திராவிட `புல்டோசர்’ மாடல்” - வேதனையில் கொதிக்கும் அனகாபுத்தூர் மக்கள்!

`நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்` எனச் சொல்லி 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர், மின் இணைப்புகளைப் பெற்று, வரி செலுத்திவந்த அடிதட்டு மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு தரை மட்டமாக்கியிருக்கிறது தி.மு.க அர... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: மாணவிகளை காலணியால் ஆசிரியை தாக்கிய விவகாரம்; அதிரடி உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சாந்தி. இவர் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்குச் சென்று கழிவறையின் கதவினை மூடாமலேயே ப... மேலும் பார்க்க

அதானி - ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: `மாதபி மீது எந்தத் தவறும் இல்லை' - லோக்பால் தீர்ப்பு

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தப் போது அதானி பெயர் அடிப்பட்ட அதே அளவுக்கு, முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச் பெயரும் அடிப்பட்டது. மதாபி பூரி புச்சும், அவரது கணவர் தவால் புச்சும் தங்களது சொந்த லாபத்தி... மேலும் பார்க்க

நாட்றம்பள்ளி: முக்கிய பேருந்து நிறுத்தம்; ஆனால் நிழற்குடை? - கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகு... மேலும் பார்க்க

வேலூர்: சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள் - அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு அருகே அமைந்திருக்கிறது, ஓங்கப்பாடி கிராமம். இந்த கிராமத்தின் அருகே வேலூரில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையின் ஓரத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டிப் போடப்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

Aadhar Card-ல் மாறும் கடைசிப் பெயர்; கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பம் - தவிர்ப்பது எப்படி?!

வங்கி கணக்கில் எதாவது மாற்றம், டிக்கெட் பதிவு... எந்த இடத்திற்குச் சென்றாலும் முதலில் கேட்கப்படும் கேள்வி 'ஆதார் இருக்கிறதா?' என்பது தான். இன்று இந்திய மக்களின் வாழ்வில் ஆதார் இன்றியமையாத இடத்தைப் பிட... மேலும் பார்க்க