செய்திகள் :

Aadhar Card-ல் மாறும் கடைசிப் பெயர்; கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பம் - தவிர்ப்பது எப்படி?!

post image

வங்கி கணக்கில் எதாவது மாற்றம், டிக்கெட் பதிவு... எந்த இடத்திற்குச் சென்றாலும் முதலில் கேட்கப்படும் கேள்வி 'ஆதார் இருக்கிறதா?' என்பது தான். இன்று இந்திய மக்களின் வாழ்வில் ஆதார் இன்றியமையாத இடத்தைப் பிடித்துவிட்டது.

கிட்டத்தட்ட 130 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் ஆதார் கார்டு (Aadhar Card) வைத்திருக்கின்றனர் என்று தரவுகள் கூறுகின்றன. ஆக, இந்தக் கட்டுரையைப் படித்து கொண்டிருக்கும் அநேகம் பேரிடம் ஆதார் கார்டு கட்டாயம் இருக்கும்.

எல்லாம் இருக்கிறதுதான்... ஆனால், ஆதார் கார்டு பல அவசர சமயங்களில் காலை வாரிவிடுகிறது... அதைக் கவனித்துள்ளீர்களா?

ஆதார் கார்டு
ஆதார் கார்டு

ஆம்... பல நேரங்களில் எங்காவது ஆதார் கார்டு கேட்கப்படும் போது, 'ஆதார் கார்டிலும், வாக்காளர் அட்டையிலும் பெயர் மாறியிருக்கிறதே', 'தமிழ் அட்ரஸும், ஆங்கில அட்ரஸும் வேறு மாதிரி இருக்கிறதே' என்று ஏகப்பட்ட குழப்பங்கள் எழுகின்றன.

இதைத் தவிர்க்க, உங்களது ஃப்ரீ டைமில், ஆதார் கார்டில் உள்ள தகவல் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை பாருங்கள்... எதாவது தவறு இருந்தால் மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

அப்படி நீங்கள் செக் செய்ய வேண்டியவை என்ன?

> கடைசிப் பெயர் சிக்கல்: 2010-ம் ஆண்டு சமயத்தில் நம்மில் பெரும்பாலானவர்கள் ஆதார் கார்டு எடுத்திருப்போம். அப்போது, இனிஷியலுக்கு பதிலாக, தந்தை பெயர் 'கடைசிப் பெயராக' பதியப்பட்டது. அதில்தான் இப்போது பெரும்பாலானவர்களுக்கு சிக்கல் எழுகிறது.

காரணம், ஆதார் கார்டைத் தவிர, பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் போன்றவற்றில் இனிஷியல் தான் கடைசிப் பெயராக பதிவாகி இருக்கிறது

இதைத் தவிர்க்க, மற்ற ஆவணங்களில் கடைசிப் பெயர் என்னவாக பதிவாகி இருக்கிறதோ, அதன்படி உங்கள் ஆதாரிலும் மாற்றிக்கொள்ளுங்கள். அதற்கு உங்கள் மற்ற ஆவணங்களையே ஆதாரமாக வழங்குங்கள்.

> முகவரி என்ன?: ஆதாரில் தமிழில் இருக்கும் முகவரியும், ஆங்கிலத்தில் இருக்கும் முகவரியும் ஒரே மாதிரி பதிவாகி இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். மாறியிருந்தால் கடைசி நேரத்தில் பிரச்னை எழும்.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை

> முகம் முதல் முகவரி வரை: நீங்கள் ஆதார் கார்டை 10-12 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருப்பீர்கள். இப்போது முகம் முதல் முகவரி வரை பல மாறியிருக்கும். அதனால், இப்போதைய தேதிக்கு ஏற்ப ஆதார் கார்டை அப்டேட் செய்வது மிக அவசியம். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை அனைவரும் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை அப்டேட் செய்துவிடுங்கள்.

> கைரேகையில் சிக்கல்: ஆதார் கார்டில் பெரும்பாலான மாற்றங்கள் செய்யச் செல்லும்போது கைரேகையை பதிவு செய்வார்கள். அதனால், அந்தச் சமயங்களில் பெண்கள் கையில் மருதாணி வைத்துக்கொள்ளாமல் செல்வது நல்லது. இல்லையென்றால், கைரேகைப் பதிவில் சிறிது மாற்றங்கள் ஏற்படலாம்.

> OTP பிரச்னை: ஆதார் எண்ணை எங்காவது ஆதாரமாகக் கொடுக்கும்போது, கட்டாயம் OTP கேட்பார்கள். அதனால், உங்களிடம் இப்போது உள்ள மொபைல் எண்தான் ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் போன்றவற்றை ஆதார் இணையதளத்திலேயே செய்துகொள்ளலாம். பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற மாற்றங்களை இ-சேவை மையங்களில் நேரில் சென்று செய்ய வேண்டும்.

சீக்கிரம்... ஆதாரை அப்டேட் செய்துவிடுங்கள் மக்களே!

அதானி - ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: `மாதபி மீது எந்தத் தவறும் இல்லை' - லோக்பால் தீர்ப்பு

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தப் போது அதானி பெயர் அடிப்பட்ட அதே அளவுக்கு, முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச் பெயரும் அடிப்பட்டது. மதாபி பூரி புச்சும், அவரது கணவர் தவால் புச்சும் தங்களது சொந்த லாபத்தி... மேலும் பார்க்க

நாட்றம்பள்ளி: முக்கிய பேருந்து நிறுத்தம்; ஆனால் நிழற்குடை? - கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகு... மேலும் பார்க்க

வேலூர்: சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள் - அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு அருகே அமைந்திருக்கிறது, ஓங்கப்பாடி கிராமம். இந்த கிராமத்தின் அருகே வேலூரில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையின் ஓரத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டிப் போடப்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

`வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 இல்ல!' - நீட்டிக்கப்பட்ட தேதி; காரணம் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதியே கடைசி நாள். ஆனால், இந்த ஆண்டு (2025) கடைசி நாளை செப்டம்பர் 15-ம் தேதிக்கு மாற்றியுள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT).வருமான வர... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கழிவறையின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த நகராட்சி!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல் மிகுந்த நகராட்சி ஆகும் . பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களால் வாணியம்பாடி பேருந்து நிலையம் எப்போதும் நெரிசல் மிகுந்த... மேலும் பார்க்க

உ.பி: மருத்துவர், செவிலியர், படுக்கைக்கூட இல்லை... அரசு மருத்துவமனையில் தரையில் நடந்த பிரசவம்!

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்பார்கள். கர்ப்பிணி என்றாலே எல்லோருக்கும் இயற்கையாகவே மனதில் ஒரு அன்பும், பரிவும் ஏற்பட்டுவிடும். அதனால்தான் ஒவ்வொரு மாநில அரசும் கர்ப்பிணிகளுக்கென பல திட்டங... மேலும் பார்க்க