சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
அமெரிக்க பூங்காவில் துப்பாக்கிச் சூடு! 7 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வாஷிங்டனின் தகோமா புறநகர் பகுதியிலுள்ள ஹேரி டோட் பூங்காவில் நேற்று (மே 28) இரவு 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த மீட்புப் படையினர், உடனடியாக படுகாயமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். மேலும், 2 பேர் தாங்களாகவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அவர்களில் 3 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து அந்நாட்டு காவல் துறையினர், இதனை யார் நடத்தியது? படுகாயமடைந்தவர்கள் குறிவைக்கப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில், அந்தப் பூங்காவில் 100-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு பிலடெல்பியா நகரத்திலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் படுகாயமடைந்ததுடன், 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பனாமா அதிபருடன் சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு!