செய்திகள் :

அமெரிக்க பூங்காவில் துப்பாக்கிச் சூடு! 7 பேர் படுகாயம்!

post image

அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வாஷிங்டனின் தகோமா புறநகர் பகுதியிலுள்ள ஹேரி டோட் பூங்காவில் நேற்று (மே 28) இரவு 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த மீட்புப் படையினர், உடனடியாக படுகாயமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். மேலும், 2 பேர் தாங்களாகவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அவர்களில் 3 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து அந்நாட்டு காவல் துறையினர், இதனை யார் நடத்தியது? படுகாயமடைந்தவர்கள் குறிவைக்கப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில், அந்தப் பூங்காவில் 100-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு பிலடெல்பியா நகரத்திலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் படுகாயமடைந்ததுடன், 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பனாமா அதிபருடன் சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு!

18.4 கோடி கூகுள், ஆப்பிள், முகநூல் பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள் கசிந்ததாக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், சமூக ஊடகங்களின் கடவுச்சொற்கள் மு... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் கடைசி வேலை நாள்: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை(டிஓஜிஇ) தலைவராக எலான் மஸ்க்கின் கடைசி வேலை நாள் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு வா்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்... மேலும் பார்க்க

டிரம்ப் பேச்சுக்குப் பிறகே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா -பாக். உடன்பாடு: நியூயாா்க் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தகவல்

அதிபா் டொனால்ட் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகே தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்பட்டன என்று நியூயாா்க் நீதிமன்றத்தில் டிரம்ப் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

இந்தியா மீது பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு: கருத்துத் தெரிவிக்க சீன ராணுவம் மறுப்பு

இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு எந்தளவு இருந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்க சீன ராணுவம் மறுத்துவிட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் கூடுதலாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை வித... மேலும் பார்க்க