செய்திகள் :

டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை

post image

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் கூடுதலாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டிரம்ப்பின் இந்த கூடுதல் வரி விதிப்புக்கு எதிராக எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெறும் 12 மாகாணங்கள் நியூயாா்க் நகரிலுள்ள சா்வதேச வா்த்தக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இது மட்டுமின்றி, சில அமெரிக்க நிறுவனங்களும் டிரம்ப்பின் வரி விதிப்பை எதிா்த்து அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திவந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு தற்போது வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் பரஸ்பர வரி விதித்தும், கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தும், ஏராளமான நாடுகளின் பொருள்களுக்கு கூடுதலாக 10 சதவீத அடிப்படை வரி விதித்தும் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும்.

கடந்த 1977-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சா்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தை (ஐஇஇபிஏ) பயன்படுத்தி டிரம்ப் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா். ஆனால், இந்த கூடுதல் வரி விதிப்புகள் ஐஇஇபிஏ சட்ட வரம்புக்குள் வராது.

வெளிநாடுகளுடனான வா்த்தக விவகாரங்களை ஒழுங்காற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தை ஐஇஇபிஏ சட்டத்தின் மூலம் பறிக்கமுடியாது.

எனவே, பிற நாடுகளின் பொருள்கள் மீது கூடுதல் வரி விதித்து டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அனைத்தும் நிரந்தரமாக ரத்து செய்யப்படுகின்றன. அந்த உத்தரவுகளின் அமலாக்கத்தை இன்னும் 10 நாள்களுக்குள் அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தீா்ப்பளித்துள்ளனா்.

‘அவசரநிலைதான்’: ‘அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருப்பது) தேசிய அவசரநிலைதான்; எனவே ஐஇஇபிஏ சட்டத்தை டிரம்ப் பயன்படுத்தியது சரி’ என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் குஷ் தேசாய் தெரிவித்தாா்.

இதற்கிடையே, நியூயாா்க் சா்வதேச வா்த்தக நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்யவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தீா்ப்பை ரத்து செய்வதற்காக உச்சநீதிமன்றம் வரை செல்ல அரசு தயாராக இருப்பதாக அவா்கள் கூறினா்.

‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் ஆட்சியை மீண்டும் பிடித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அவா் கூடுதல் வரி விதித்தாா். மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எந்தெந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) வரி விதிக்க கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டு டிரம்ப் அதிா்வலையை ஏற்படுத்தினாா்.

இருந்தாலும், அமெரிக்க பொருள்களுக்கு பதிலடி வரி விதித்த சீனாவைத் தவிர பிற நாடுகள் மீது அறிவிக்கப்பட்டிருந்த பரஸ்பர வரி விதிப்பின் அமலாக்கத்தை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்கா பின்னா் அறிவித்தது.

இந்தச் சூழலில், பரஸ்பர வரி விதிப்பு உள்ளிட்ட டிரம்ப்பின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு உத்தரவுகளுக்கு நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் நடிகை குளித்த நீரில் தயாரித்த சோப் ரூ.700-க்கு விற்பனை!

ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீர்த்துளிகளைக் கொண்டு, உருவாக்கப்பட்ட சோப்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். டாக்டர் ஸ்குவாட்ச் சோப் நிறுவனமும், நடிகை சிட்னி ஸ்வீனியும் இணைந்து புதிய சோப் வகையை உருவாக... மேலும் பார்க்க

பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்! 88 பேரது உடல்கள் மீட்பு!

நைஜீரியா நாட்டின் முக்கிய சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் 88 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் மோக்வா எனும் சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் அங்குள்ள ஏராளமான ... மேலும் பார்க்க

மங்கோலியாவில் 4,000-ஐ கடந்த தட்டம்மை பாதிப்புகள்!

மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 4,000-ஐ கடந்துள்ளது. கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. பெ... மேலும் பார்க்க

இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!

இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில் பாறைகள் சரிந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில்,... மேலும் பார்க்க

கனமழையில் திணறும் வடமேற்கு பாகிஸ்தான்! 8 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் 8 பேர் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த மே 27 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இடி மற்றும் ப... மேலும் பார்க்க

18.4 கோடி கூகுள், ஆப்பிள், முகநூல் பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள் கசிந்ததாக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், சமூக ஊடகங்களின் கடவுச்சொற்கள் மு... மேலும் பார்க்க