இன்று இடிக்கப்படுகிறது நிஜாமுதீன் மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்
கரோனா பரவல்: முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!
நாடு முழுவதும் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவலைத் தடுக்க, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தெற்காசிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் மீண்டும் கரோனா தொற்று பரவி வருகின்றது. மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க கூட்டம் கூடும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இத்துடன், சுவாச நோய் அறிகுறி, காய்ச்சல் உள்ளவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது பாதுகாப்பானது என்றும், உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்குமாறும், தடுப்பூசிகளை முறையாகச் செலுத்திக்கொள்ளமாறும் பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
இத்துடன், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கரோனா பரவலைக் கண்காணிக்கவும், நோய் பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க:எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு