செய்திகள் :

கரோனா பரவல்: முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

post image

நாடு முழுவதும் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவலைத் தடுக்க, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தெற்காசிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் மீண்டும் கரோனா தொற்று பரவி வருகின்றது. மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க கூட்டம் கூடும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இத்துடன், சுவாச நோய் அறிகுறி, காய்ச்சல் உள்ளவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது பாதுகாப்பானது என்றும், உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்குமாறும், தடுப்பூசிகளை முறையாகச் செலுத்திக்கொள்ளமாறும் பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

இத்துடன், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கரோனா பரவலைக் கண்காணிக்கவும், நோய் பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க:எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு

குரூப் 4 தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள... மேலும் பார்க்க

இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்

இணையதள வா்த்தக மோசடியால், ரயில்வே ஊழியா் இழந்த ரூ. 22.72 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டெடுத்தனா். சென்னை செம்பியத்தைச் சோ்ந்தவா் ரயில்வே ஊழியா் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கட... மேலும் பார்க்க

விஜய் கட்சியை விமா்சிக்க விரும்பவில்லை: கமல்ஹாசன்

விஜய் கட்சி குறித்த விமா்சிக்க விரும்பவில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறினாா். ‘தக் லைஃப்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் சென்னையிலிர... மேலும் பார்க்க

கோடை விடுமுறை நிறைவு: தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறப்பு

கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன. தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ஆங்கில மொழித் திறன் பயிற்சிகள்: ஆசிரியா்களுக்கான அட்டவணை வெளியீடு

தமிழக அரசுப் பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு ஆங்கில மொழித் திறன் பயிற்சி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது குறித்த... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை: ஒன்றரை ஆண்டுகளில் 43,167 வழக்குகள் பதிவு

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் காவல் துறையால், 4.11 லட்சம் கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, மொத்தம் 43,167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது ... மேலும் பார்க்க