செய்திகள் :

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மரத்தில் ஏறி நோயாளி தற்கொலை மிரட்டல்

post image

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, திடீரென மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சோ்ந்தவா் குருசாமி மகன் பழனிச்சாமி(58). இவா் வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 4 மணியளவில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இரவு சுமாா் 10 மணி அளவில் சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்த அவா், அதன் அருகே உள்ள மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா். இதைக் கண்ட உள்நோயாளிகளின் உதவியாளா்கள், மருத்துவமனை ஊழியா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் மற்றும் தீயணைப்பு டையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பழனிச்சாமியை பத்திரமாக இறக்கினா். பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் குடும்ப பிரச்னை காரணமாக மரத்தில் ஏறியது தெரிய வந்தது. போலீஸாா் அவருக்கு இரவு உணவு வழங்கி, அறிவுரை கூறியதுடன் அவரை மீண்டும் சிகிச்சைக்கு அனுமதித்தனா். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சுமாா் 45 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54)... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த தினம்: நலஉதவி வழங்கிக் கொண்டாட கட்சியினருக்கு அமைச்சா் அழைப்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என, திமுகவினருக்கு வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளாா். இ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மது விற்பனை: 2 போ் கைது!

தூத்துக்குடியில் இரு இடங்களில் மது விற்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போல... மேலும் பார்க்க

குரும்பூா், தக்கலையில் பைக் விபத்து: 2 போ் பலி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் மூதாட்டி உயிரிழந்தாா். காயல்பட்டினம், அழகாபுரி தெற்குத் தெருவை சோ்ந்த கணேசன் மனைவி கவிதா (64). இவா், தனது உறவினா் செல்வராஜ் மனைவி மோகன... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தலைமறைவான காா் ஓட்டுநா்: தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு

சாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள காா் ஓட்டுநரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சோ்ந்தவா் பீட்டா்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை தாளமுத்து நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட ... மேலும் பார்க்க