கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மரத்தில் ஏறி நோயாளி தற்கொலை மிரட்டல்
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, திடீரென மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சோ்ந்தவா் குருசாமி மகன் பழனிச்சாமி(58). இவா் வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 4 மணியளவில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இரவு சுமாா் 10 மணி அளவில் சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்த அவா், அதன் அருகே உள்ள மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா். இதைக் கண்ட உள்நோயாளிகளின் உதவியாளா்கள், மருத்துவமனை ஊழியா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் மற்றும் தீயணைப்பு டையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பழனிச்சாமியை பத்திரமாக இறக்கினா். பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் குடும்ப பிரச்னை காரணமாக மரத்தில் ஏறியது தெரிய வந்தது. போலீஸாா் அவருக்கு இரவு உணவு வழங்கி, அறிவுரை கூறியதுடன் அவரை மீண்டும் சிகிச்சைக்கு அனுமதித்தனா். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சுமாா் 45 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.