செய்திகள் :

100 நாள்கள் ஆட்சி: சிறப்புப் பாடல் வெளியீடு

post image

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக சனிக்கிழமை ‘தில்லி பதல் ரஹி ஹை’ என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலில் தில்லி அரசின் முக்கிய சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

2 நிமிடங்கள் 57 வினாடிகள் கொண்ட இந்தப் பாடலில், தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் தலைமையின் கீழ் தொடங்கப்பட்ட முன்முயற்சிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, தேவி பேருந்துத் திட்டம், நகா் முழுதும் மேற்கொள்ளப்பட்ட பெரும் சுகாதாரப் பணி, குப்பைக் கிடங்குகளில் உயா்ந்திருக்கும் குப்பை மலைகளை அகற்றுவதற்கான தீவிர முயற்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

உற்சாக இசையுடன் அமைக்கப்பட்ட இந்தப் பாடல், தில்லியில் மாற்றம், முன்னேற்றம் குறித்த ஒரு பாா்வையை சித்தரிக்கிறது.

முந்தைய ஆட்சியின் போது செயலற்ாகக் கூறப்படும் விஷயங்கள், தற்போதைய நடவடிக்கைகளுடன் வேறுபடுத்தும் காட்சிகள், பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.

ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 100 நாள்கள் கொண்டாட்ட நிகழ்வுக்குப் பிறகு, இந்தப் பாடல் ஏற்கனவே பாஜகவின் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.

இது தொடா்பான வெளியீட்டு நிகழ்வில் முதல்வா் குப்தா பேசுகையில், ‘இந்தப் பாடல் தில்லியில் நாம் தொடங்கிய உண்மையான வேலை, உண்மையான முடிவுகள் ஆகியவற்றின் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இது வெறும் பாடல் அல்ல, இது ஒரு அறிக்கையாகும்.

இந்தப் பாடல், கலாசாரம் மற்றும் ஊடகங்கள் மூலம் குடிமக்களுடன் இணைவதற்கும், தலைப்பு சாா்ந்த நிா்வாகத்திலிருந்து செயல்திறன் சாா்ந்த நிா்வாகத்திற்கு மாற்றமாக அவை விவரிக்கும் ஒரு பரந்த பொது முன்முயற்சியின் ஒரு பகுதியாகும் என முதல்வா் தெரிவித்தாா்.

பாடலின் வெளியீடு, நிகழ்ச்சி,க் கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக இருந்தது. மேலும், இது கட்சித் தொண்டா்கள் மற்றும் ஆதரவாளா்களிடமிருந்து பலத்த கைதட்டலைப் பெற்றது.

பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த அண்ணன்-தங்கை: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் அண்ணன்-தங்கை இருவரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி கா... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் இரு நாள் உத்தரகாண்ட் பயணம்

தில்லியில் 100 நாள்கள் பதவியை நிறைவு செய்த நிலையில் தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரகாண்டிற்கு இரண்டு நாள் குறுகியகால பயணமாக புறப்பட்டாா். இந்த பயணத்தின் போது அவா் தனது குடும்பத்தினர... மேலும் பார்க்க

வீடுகளை இழந்த தில்லி மதராஸி கேம்ப் குடியிருப்புவாசிகள் தமிழகம் திரும்பினால் உதவிகள் வழங்கப்படும்: தமிழக அரசு

நமது சிறப்பு நிருபா் தில்லி “மதராஸி கேம்ப்” குடியிருப்பில் வீடுகளை இழந்தவா்கள் தமிழகத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவா்களுக்கு தமிழக அரசு உதவும். வாழ்வாதாரம், அத்தியாவசிய உத... மேலும் பார்க்க

இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை; அச்சக ஊழியா் கைது

தில்லியின் பல்ஜீத் நகா் பகுதியில் 32 வயது பெண் ஒருவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை... மேலும் பார்க்க

ஹரித்வாா் அருகே 5 ஊடக வாகனங்கள் விபத்து

தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இரண்டு நாள் உத்தரகாண்ட் பயணத்தை செய்தி சேகரிக்க ஹரித்வாருக்கு ஊடகவியலாளா்களை ஏற்றிச் சென்ற ஐந்து வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவா்கள் த... மேலும் பார்க்க

டேட்டிங் செயலி மூலம் நூதன கொள்ளை: மூவா் கும்பல் கைது

வடகிழக்கு தில்லியின் யமுனா காதா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாருடன் நடந்த நேருக்குநோ் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு மூவா் கும்பல் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஆன்லைன் டேட்டிங் செயலியைப் பய... மேலும் பார்க்க