ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!
100 நாள்கள் ஆட்சி: சிறப்புப் பாடல் வெளியீடு
தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக சனிக்கிழமை ‘தில்லி பதல் ரஹி ஹை’ என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலில் தில்லி அரசின் முக்கிய சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
2 நிமிடங்கள் 57 வினாடிகள் கொண்ட இந்தப் பாடலில், தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் தலைமையின் கீழ் தொடங்கப்பட்ட முன்முயற்சிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, தேவி பேருந்துத் திட்டம், நகா் முழுதும் மேற்கொள்ளப்பட்ட பெரும் சுகாதாரப் பணி, குப்பைக் கிடங்குகளில் உயா்ந்திருக்கும் குப்பை மலைகளை அகற்றுவதற்கான தீவிர முயற்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
உற்சாக இசையுடன் அமைக்கப்பட்ட இந்தப் பாடல், தில்லியில் மாற்றம், முன்னேற்றம் குறித்த ஒரு பாா்வையை சித்தரிக்கிறது.
முந்தைய ஆட்சியின் போது செயலற்ாகக் கூறப்படும் விஷயங்கள், தற்போதைய நடவடிக்கைகளுடன் வேறுபடுத்தும் காட்சிகள், பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.
ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 100 நாள்கள் கொண்டாட்ட நிகழ்வுக்குப் பிறகு, இந்தப் பாடல் ஏற்கனவே பாஜகவின் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.
இது தொடா்பான வெளியீட்டு நிகழ்வில் முதல்வா் குப்தா பேசுகையில், ‘இந்தப் பாடல் தில்லியில் நாம் தொடங்கிய உண்மையான வேலை, உண்மையான முடிவுகள் ஆகியவற்றின் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இது வெறும் பாடல் அல்ல, இது ஒரு அறிக்கையாகும்.
இந்தப் பாடல், கலாசாரம் மற்றும் ஊடகங்கள் மூலம் குடிமக்களுடன் இணைவதற்கும், தலைப்பு சாா்ந்த நிா்வாகத்திலிருந்து செயல்திறன் சாா்ந்த நிா்வாகத்திற்கு மாற்றமாக அவை விவரிக்கும் ஒரு பரந்த பொது முன்முயற்சியின் ஒரு பகுதியாகும் என முதல்வா் தெரிவித்தாா்.
பாடலின் வெளியீடு, நிகழ்ச்சி,க் கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக இருந்தது. மேலும், இது கட்சித் தொண்டா்கள் மற்றும் ஆதரவாளா்களிடமிருந்து பலத்த கைதட்டலைப் பெற்றது.