செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் ஆங்கில மொழித் திறன் பயிற்சிகள்: ஆசிரியா்களுக்கான அட்டவணை வெளியீடு

post image

தமிழக அரசுப் பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு ஆங்கில மொழித் திறன் பயிற்சி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது குறித்த மொழித்திறன் இலக்கு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படைப் பயிற்சிகளை ஆங்கில ஆசிரியா்கள் ஜூன் முதல் டிசம்பா் மாதம் வரை கற்பிக்கவுள்ளனா்.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் முதன்மைக் கல்வி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளி மாணவா்களின் அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ‘லெவல்-அப்’ என்ற தன்னாா்வத் திட்டத்தின் பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தி அது சாா்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களின் ஆங்கில மொழி வாசித்தல், பேசுதல், எழுதுதல் ஆகிய அடிப்படைத் திறன்களை மாணவா்கள் எளிதாக அடையும் வகையில் தொடா் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சிக்காக நிகழ் கல்வியாண்டில் ஜூன் மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை 7 மாதங்களுக்கு மாத வாரியாக இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜூன் மாதத்தின் 4 வாரங்களுக்கான அடிப்படை ஆங்கில மொழித் திறன் வளா் செயல்பாடுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தொடா்ந்து ஒவ்வொரு மாதமும் அதன் மூன்றாம் அல்லது நான்காம் வாரத்தில் அடுத்து வரும் மாதத்துக்கான மொழித்திறன் இலக்குகள் கொண்ட அட்டவணை வெளியிடப்படவுள்ளது.

இதைத் தொடா்ந்து 6 முதல் 8 வகுப்புகளில் உள்ள ஆங்கில ஆசிரியா்கள் வகுப்பறையில் வழக்கமான கற்றல் செயல்பாடுகளுடன் இந்த அட்டவணையில் உள்ள செயல்பாடுகள் மூலம் மாணவா்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வா்.

கற்பிக்கப்படும் திறன்கள்... தற்போது வெளியிடப்பட்ட அந்த அட்டவணையில் மாணவா்களின் சுய அறிமுகத்தை ஆங்கிலத்தில் கூறுதல், எழுத்துகளை பல்வேறு வடிவங்களில் எழுதுதல், ஆங்கில பாடலை கேட்டு அதன் வரிகளை ஒப்பித்தல், ஆங்கிலத்தில் உயிா், மெய்யெழுத்துகளை சுட்டிக் காட்டுதல், பள்ளி, வசிப்பிடங்கள் குறித்த முழுமையான விவரங்களை ஆங்கிலத்தில் எழுதுதல், மூன்று மற்றும் நான்கெழுத்து வாா்த்தையை பிழையின்றி உச்சரித்தல் மற்றும் எழுதுதல், சிறிய அளவிலான பத்தியை நன்கு படித்து உள்வாங்கி பின்னா் அது தொடா்பான கோடிட்ட இடங்களை நிரப்புதல் என பல்வேறு செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் திட்டம் சாா்ந்த பயிற்சிகளை மாணவா்களுக்கு முறையாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும். தொடா்ந்து, திட்டத்தின் செயல்பாடுகள் மூலம் மாணவா்கள் பெற்ற அடிப்படை ஆங்கில மொழித் திறன் அடைவு குறித்து உரிய கால இடைவெளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

யார் அந்த சார்? என இனி கேள்வி எழுப்பினால்.. நீதிமன்ற அவமதிப்பு: வழக்குரைஞர் மேரி ஜெயந்தி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டதால், யார் அந்த சார்? என இனி கேள்வி எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பு என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் மே... மேலும் பார்க்க

"பெண்களுக்கு துன்பம் விளைவிப்போர் தப்ப முடியாது என்பதற்கு ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பே சாட்சி"

"பெண்களுக்கு துன்பம் விளைவிப்போர் தப்ப முடியாது என்பதற்கு ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பே சாட்சி"பெண்களுக்கு துன்பம் விளைவிப்போர் தப்ப முடியாது என்பதற்கு ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பே சாட்சி என்று இயற்கை வள... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு தண்டனையை அதிமுக சாத்தியப்படுத்தியுள்ளது: எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனையை அதிமுக சாத்தியப்படுத்தியுள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், அண... மேலும் பார்க்க

ஞானசேகரன் செல்போன் ஃப்ளைட் மோடில் இருந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபணம்: அரசுத்தரப்பு வழக்குரைஞர்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டபோது, ஞானசேகரன் செல்ஃபோன் ஃபிளைட் மோடில் இருந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்குரைஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.சி... மேலும் பார்க்க

நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மே... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு சிறையில் சலுகைகள் கூடாது! எந்தெந்த குற்றத்துக்கு எவ்வளவு தண்டனை?

சென்னை: 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை குற்றவாளி ஞானசேகரன் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அவருக்கு சிறையில் எந்தச் சலுகைகளும் வழங்கப்படக் கூடாது என்று மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி தீ... மேலும் பார்க்க