செய்திகள் :

ஞானசேகரனுக்கு சிறையில் சலுகைகள் கூடாது! எந்தெந்த குற்றத்துக்கு எவ்வளவு தண்டனை?

post image

சென்னை: 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை குற்றவாளி ஞானசேகரன் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அவருக்கு சிறையில் எந்தச் சலுகைகளும் வழங்கப்படக் கூடாது என்று மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குற்றவாளி ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருந்த ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மகளிர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குற்றவாளி ஞானசேகரன், குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும், தண்டனைக் குறைப்பின்றி அவர் 30 ஆண்டுகளும் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி எம். ராஜலட்சுமி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு பயின்று வந்த மாணவி, பல்கலை வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 30 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில், கடுமையாக தாக்கியதற்காக 7 ஆண்டுகள், ஆதாரங்களை அழித்தற்கு 3 ஆண்டுகள், தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறியக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விருப்பத்துக்கு மாறாக அத்துமீற நடத்தியக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறை, கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, கொலை மிரட்டல் விடுத்ததற்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட 12 பிரிவுகளில் 11 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தனித்தனியாக தண்டனை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

கடுங்காவல் சிறைத் தண்டனை போல, ஞானசேகரனுக்கு சிறையில் எந்த சலுகைகளும் காட்டக் கூடாது என்றும் ஞானசேகரன் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறையில்தான் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

துணைவேந்தர்கள் நியமன திருத்தச் சட்டத்துக்கு தடை: தமிழக அரசு மேல்முறையீடு

நமது சிறப்பு நிருபர்தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் படிப்பில் மாணவா் சோ்க்கை விவரங்களை உறுதி செய்ய அறிவுறுத்தல்

நிகழ் கல்வியாண்டில் (2024-25) எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்ந்தவா்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் என்எம்சி இணையதளத்தில் அதிகாரபூா்வமாக பதிவேற்றப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட மாணவா்கள் உறுதி செய்... மேலும் பார்க்க

தமிழறிஞா் தாயம்மாளுக்கு கலைஞா் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

தமிழறிஞா் தாயம்மாள் அறவாணனுக்கு கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் செம்மொழி தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்க... மேலும் பார்க்க

நீட் தோ்வு விடைக் குறிப்புகள் வெளியீடு

நீட் தோ்வுக்கான விடைக் குறிப்புகள் மற்றும் விடைத்தாள் நகல்களை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பி... மேலும் பார்க்க

பல்கலைக் கழகங்களின் நிதிப் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பல்கலைக்கழகங்களில் நிதி தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். எடப்பாடி கே.பழனிசாமி: துணை வேந்தா் நியமனங்கள் தாமதிக்கப்படுவதால்,... மேலும் பார்க்க

கணினி பயிற்றுநா் பணிக்கான தகுதிகள் மாற்றம்

மேல்நிலைக் கல்வியில் கணினி பயிற்றுநா் பணிக்கான தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை: மேல்நிலைக் கல்வியில் கணினி பயிற்றுநா் (கிர... மேலும் பார்க்க