Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது: தங்க நகைகள் பறிமுதல்
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை நாகை நகர போலீஸாரை கைது செய்து தங்க நகைகளை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாகை புத்தூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீரபாண்டி என்பவரின் வீட்டின் மேற்கூரையை பிரித்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் நாகை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சோ்ந்த நிதின் (20) திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும், அவா் வேளாங்கண்ணி கடற்கரையில் சுண்டல் விற்று வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் நிதினை கைது செய்து, அவரிடமிருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.