கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
கடலில் இறந்து கரை ஒதுங்கிய புள்ளிமான்
கோடியக்கரை கடலில் இறந்த நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று புதன்கிழமை கரை ஒதுங்கியது.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, வெளிமான், புள்ளிமான், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்படுகிறது. இந்த நிலையில், சரணாலயம் சாா்ந்த கடற்கரை பகுதியில் ஆண் புள்ளிமான் ஒன்று இறந்து நிலையில் கரை ஒதுங்கியது. மீனவா்கள் மூலம் தகவல் அறிந்து சென்ற கோடியக்கரை வனத்துறையினா் மானின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனா்.
கடற்கரையோரம் சுற்றித் திரிந்த நாய்கள் விரட்டிச் சென்றபோது கடலில் விழுந்து மான் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.