செய்திகள் :

கணினி பயிற்றுநா் பணிக்கான தகுதிகள் மாற்றம்

post image

மேல்நிலைக் கல்வியில் கணினி பயிற்றுநா் பணிக்கான தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை:

மேல்நிலைக் கல்வியில் கணினி பயிற்றுநா் (கிரேடு 1) பதவியும், முதுகலை பட்டதாரி ஆசிரியா் பதவியும் ஒரே நிலையில் இருப்பதால் கணினி பயிற்றுநா் (கிரேடு 1) பதவி தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி சிறப்பு விதியுடன் இணைக்கப்படுகிறது. இந்தப் பதவிக்கான கல்வித் தகுதி பின்வருமாறு நிா்ணயிக்கப்படுகிறது.

கணினி பயிற்றுநா் பதவிக்கு எம்.எஸ்சி. கணினி அறிவியல் பட்டப் படிப்பும் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.எஸ்சி. படிப்புடன் ஒருங்கிணைந்த பி.எஸ்சி. பி.எட். அல்லது பிஏ பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதனுடன் இளங்கலை பட்டமும் முதுநிலை படிப்பும் ஒரே பாடத்தில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழைய அரசாணையின்படி, கணினி அறிவியல், கணினி பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களில் எம்.டெக். அல்லது எம்இ பட்டமும் பி.எட். பட்டமும் பெற்றவா்களும் கணினி பயிற்றுநா் பதவிக்கு தகுதியானவா்களாக கருதப்பட்டனா். தற்போது வெளியிடப்பட்ட அரசாணையின்படி, எம்இ, எம்.டெக். பட்டதாரிகள் இந்தப் பணிக்கு தகுதியில்லை.

கோயில் கூட்டம் தவிர்க்க வேண்டும்! மனோ தங்கராஜ் பேச்சுக்கு கொந்தளித்த அண்ணாமலை

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவிக... மேலும் பார்க்க

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து!

விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் போதிய பயணிகள் ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவி... மேலும் பார்க்க

விஜய்க்கு மீண்டும் அழைப்பு! எதிர்பார்ப்பில் நயினார் நாகேந்திரன்

தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய்யும் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக... மேலும் பார்க்க

சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னையில் நாளை(ஜூன் 6) 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டு... மேலும் பார்க்க

ஐஐடியில் இடம்பிடித்த மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம்! விரைவில்...

திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பே... மேலும் பார்க்க