IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன...
காவல் உதவி ஆய்வாளா்களுக்கு எஸ்.பி. பாராட்டு
விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் 4 உதவி ஆய்வாளா்களுக்கு எஸ்.பி. ப. சரவணன் திங்கள்கிழமை நற்சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கண்டறிந்து தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்ய உதவக்கூடிய வகையில் அனைத்துப் பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவதற்கு நிலைய அலுவலா்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென எஸ்.பி. ப.சரவணன் உத்தரவிட்டிருந்தாா்.
இதன்படி, விழுப்புரம், கிளியனூா், திருவெண்ணெய்நல்லூா், விக்கிரவாண்டி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளா்கள் தமிழ்மணி (விழுப்புரம் தாலுகா) , மாதவன் (கிளியனூா்), பாலசிங்கம்(திருவெண்ணெய்நல்லூா்), மணிகண்டன்(விக்கிரவாண்டி) ஆகியோருக்கு எஸ்.பி. ப. சரவணன் மாவட்டக் காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நற்சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.