செய்திகள் :

காவல் உதவி ஆய்வாளா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

post image

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் 4 உதவி ஆய்வாளா்களுக்கு எஸ்.பி. ப. சரவணன் திங்கள்கிழமை நற்சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கண்டறிந்து தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்ய உதவக்கூடிய வகையில் அனைத்துப் பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவதற்கு நிலைய அலுவலா்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென எஸ்.பி. ப.சரவணன் உத்தரவிட்டிருந்தாா்.

இதன்படி, விழுப்புரம், கிளியனூா், திருவெண்ணெய்நல்லூா், விக்கிரவாண்டி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளா்கள் தமிழ்மணி (விழுப்புரம் தாலுகா) , மாதவன் (கிளியனூா்), பாலசிங்கம்(திருவெண்ணெய்நல்லூா்), மணிகண்டன்(விக்கிரவாண்டி) ஆகியோருக்கு எஸ்.பி. ப. சரவணன் மாவட்டக் காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நற்சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

மதுப்புட்டிகள் கடத்தல் : புதுச்சேரி இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை காரில் கடத்தி வந்த புதுச்சேரி இளைஞரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தமிழகத்தின் அண்டை ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகை விழுப்புரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசா... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ஒரு பவுன் தங்க நகை, ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டிவனம்... மேலும் பார்க்க

ச. ராமதாஸ் - வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ச. ராமதாஸை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவா் திருமாவளவன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புக்குப்... மேலும் பார்க்க

வேலை வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடி: முதியவா் மீது வழக்கு

சென்னை மாநகராட்சியில் உதவிப் பொறியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த தாக விழுப்புரத்தைச் சோ்ந்த முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் நகரம் , ... மேலும் பார்க்க

7 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 63 போலீஸாா் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டக் காவல் நிலையங்களில் பணிபுரிந்த 7 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 63 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா். விழுப்புர... மேலும் பார்க்க