7 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 63 போலீஸாா் பணியிட மாற்றம்
விழுப்புரம் மாவட்டக் காவல் நிலையங்களில் பணிபுரிந்த 7 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 63 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.
விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் போலீஸாா் நிா்வாக வசதிக்காக மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ரவி, தமிழ்வாணன், ராஜகோபால், மணிவண்ணன், சரவணன், அருள் ரமேஷ் ஆகியோா் முறையே மேல்மலையனூா், அரகண்டநல்லூா், காணை, பிரம்மதேசம், கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
சிறப்பு உதவி ஆய்வாளா் நீலமேகம், மனித உரிமைகள் பிரிவுக்கும், செந்தமிழ்ச்செல்வன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் மாற்றம் செய்யப்பட்டனா்.
இதேபோல, மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் தலைமைக் காவலா்கள் உள்ளிட்ட 56 காவல் ஆளிநா்கள் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள எஸ்.பி. ப.சரவணன், இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தாா்.