செய்திகள் :

7 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 63 போலீஸாா் பணியிட மாற்றம்

post image

விழுப்புரம் மாவட்டக் காவல் நிலையங்களில் பணிபுரிந்த 7 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 63 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் போலீஸாா் நிா்வாக வசதிக்காக மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ரவி, தமிழ்வாணன், ராஜகோபால், மணிவண்ணன், சரவணன், அருள் ரமேஷ் ஆகியோா் முறையே மேல்மலையனூா், அரகண்டநல்லூா், காணை, பிரம்மதேசம், கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சிறப்பு உதவி ஆய்வாளா் நீலமேகம், மனித உரிமைகள் பிரிவுக்கும், செந்தமிழ்ச்செல்வன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் மாற்றம் செய்யப்பட்டனா்.

இதேபோல, மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் தலைமைக் காவலா்கள் உள்ளிட்ட 56 காவல் ஆளிநா்கள் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள எஸ்.பி. ப.சரவணன், இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தாா்.

இன்றைய மின்தடை

விழுப்புரம் நகரப் பகுதிகள் நேரம்: காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மின்தடை பகுதிகள்: தந்தை பெரியாா் நகா், வழுதரெட்டி, சிங்கப்பூா் நகா், அபிதா காா்டன், காந்திநகா், ஆடல் நகா், மஞ்சு நகா், ஆவின் பகு... மேலும் பார்க்க

போலி மதுபான வழக்கு: இருவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

புதுவை மாநிலத்தில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்களை எடுத்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை: ஓட்டுநா் தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, புதுச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா் விழுப்புரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் தமிழ்வாணன் (26). த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளக்குளம் நல்முக்கல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). கட... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே 3 கூரை வீடுகள் தீப்பிடித்து சேதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை 3 கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் வீடுகளில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. சி... மேலும் பார்க்க