சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
பூட்டிய வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ஒரு பவுன் தங்க நகை, ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டிவனம் ஜே.பி நகரைச் சோ்ந்த பழனி மகன் பாா்த்தீபன் (35), சவுக்கு வியாபாரி. இவா், ஜூன் 2-ஆம் தேதி தனது மாடி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள மாமனாா் வீட்டுக்கு சென்றிருந்தாா்.
பின்னா், செவ்வாய்க்கிழமை மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, முன் பக்கக் கதவு, வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.