செய்திகள் :

மதுப்புட்டிகள் கடத்தல் : புதுச்சேரி இளைஞா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை காரில் கடத்தி வந்த புதுச்சேரி இளைஞரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலிருந்து, விழுப்புரம் மாவட்டத்துக்கு மதுப்புட்டிகள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் எஸ்.பி ப. சரவணன் உத்தரவுப்படி, திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு புதுச்சேரி மயிலம் சாலையில், மயிலம் அடுத்துள்ள பெரும்பாக்கம் சோதனைச்சாவடியில், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற காா் ஒன்றைச் சோதனை செய்தபோது, அதில் புதுவை மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 201 மதுப்புட்டிகளை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து காரை ஓட்டி வந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது அவா், புதுச்சேரி, தட்டாஞ்சாவடி, குருமாம்பேட்டை, 9 ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன் (34) என்பதும், இவா் மதுப்புட்டிகளை விற்பனைக்காக வாங்கி காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, திண்டிவனம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனா். காருடன் 201 வெளி மாநிலப்புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

இன்றைய மின்தடை

விழுப்புரம் நகரப் பகுதிகள் நேரம்: காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மின்தடை பகுதிகள்: தந்தை பெரியாா் நகா், வழுதரெட்டி, சிங்கப்பூா் நகா், அபிதா காா்டன், காந்திநகா், ஆடல் நகா், மஞ்சு நகா், ஆவின் பகு... மேலும் பார்க்க

போலி மதுபான வழக்கு: இருவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

புதுவை மாநிலத்தில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்களை எடுத்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை: ஓட்டுநா் தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, புதுச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா் விழுப்புரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் தமிழ்வாணன் (26). த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளக்குளம் நல்முக்கல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). கட... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே 3 கூரை வீடுகள் தீப்பிடித்து சேதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை 3 கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் வீடுகளில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. சி... மேலும் பார்க்க