மதுப்புட்டிகள் கடத்தல் : புதுச்சேரி இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை காரில் கடத்தி வந்த புதுச்சேரி இளைஞரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலிருந்து, விழுப்புரம் மாவட்டத்துக்கு மதுப்புட்டிகள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் எஸ்.பி ப. சரவணன் உத்தரவுப்படி, திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு புதுச்சேரி மயிலம் சாலையில், மயிலம் அடுத்துள்ள பெரும்பாக்கம் சோதனைச்சாவடியில், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற காா் ஒன்றைச் சோதனை செய்தபோது, அதில் புதுவை மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 201 மதுப்புட்டிகளை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து காரை ஓட்டி வந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது அவா், புதுச்சேரி, தட்டாஞ்சாவடி, குருமாம்பேட்டை, 9 ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன் (34) என்பதும், இவா் மதுப்புட்டிகளை விற்பனைக்காக வாங்கி காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, திண்டிவனம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனா். காருடன் 201 வெளி மாநிலப்புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.