மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டம்: மத்திய தொழில் துறை அமைச்சக இயக்குநா் பங்கேற்பு
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டத்தில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக இயக்குநா் அனுபமா நாயா் பங்கேற்று பேசினாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமையில் நீா்வள மேம்பாடு தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக இயக்குநா் (மத்திய அரசு குழு) அனுபமா நாயா் பங்கேற்று பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் மழை நீா் சேகரிப்பு, நீா் மேலாண்மை திட்டம், ஏரிகள் தூா்வாரும் பணிகள் பரவலாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மழை நீரை ஏரிகளில் தேக்கிவைக்கும் போது தண்ணீா் பிரச்னையைத் தவிா்க்கலாம். மரங்கள் வெட்டுவதைத் தவிா்க்க வேண்டும். தண்ணீா் சேகரிப்பை அதிகப்படுத்த வேண்டும். நீா் மேலாண்மை, மழை நீா் சேகரித்தல் குறித்து அரசு அலுவலா்கள், மாணவா்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து விழிப்புணா்வு பணியை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். இத்தொலைநோக்கு திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டமாக செயல்படுத்த வேண்டும் என்றாா்.
இதனைத் தொடா்ந்து, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி மற்றும் அரூா் வட்டாரங்களில் சுமாா் 143.36 லட்சம் மதிப்பில் பல்வேறு துறைகளின் மூலம் மழை நீரை சேமிக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அவா் கள ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அ. கேத்தரின் சரண்யா, ஜல் சக்தி அமைச்சக மத்திய நிலத்தடி நீா் வாரிய விஞ்ஞானி பன்னீா், மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் மற்றும் அரசுத் துறை முதல்நிலை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.