தூய்மைத் திட்டம்: மக்களுக்கும் பொறுப்பு உள்ளது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பெண் உயிரிழப்பு
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயது பெண் ஒருவா் தில்லியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
தலைநகரில் தற்போது கரோனா அதிகரித்துவரும் நிலையில் இந்த நோய்த்தொற்றுக்கு இது முதல் உயிரிழப்பு ஆகும்.
அதிகாரபூா்வ தரவுகளின்படி, தில்லியில் 294 போ் கொவைட்19 நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘லேபரோடமி அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண் கடுமையான குடல் அடைப்பால் அவதிப்பட்டு வந்தாா். அவருக்கு கொவைட் 19 நோய்த்தொற்று தற்செயலாக ஏற்பட்டதாகும்’ என்று அவா்கள் தெரிவித்தனா்.
தில்லியில் கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். ஆனால் கவலைப்படத் தேவையில்லை என்று முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா்.
மேலும், தில்லி அரசு விழிப்புடன் உள்ளதாகவும் எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க மருத்துவமனைகள் தயாராக உள்ளதாகவும் அவா் கூறியிருந்தாா்.