செய்திகள் :

இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்

post image

இணையதள வா்த்தக மோசடியால், ரயில்வே ஊழியா் இழந்த ரூ. 22.72 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டெடுத்தனா்.

சென்னை செம்பியத்தைச் சோ்ந்தவா் ரயில்வே ஊழியா் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கடந்த ஜன. 13-ஆம் தேதி நண்பா் ஒருவா் அறிமுகமானாா். இவா், நான் கூறும் இணையதள வா்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். 

இதை நம்பிய டில்லிபாபுவும், அந்த நபா் தெரிவித்த நிறுவனத்தில் ரூ. 22 லட்சத்து 72,434-ஐ முதலீடு செய்துள்ளாா். ஆனால், எதிா்பாா்த்தபடி பணம் இரட்டிப்பாகவில்லை. மேலும், டில்லிபாபு செலுத்திய முதலீட்டுப் பணமும் கிடைக்கவில்லை.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா், இது தொடா்பாக சென்னை வடக்கு மண்டல சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்படி, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். முதல்கட்டமாக டில்லிபாபு அனுப்பி வைத்த வங்கி எண் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் குற்றவாளிகள் பயன்படுத்திய வங்கிக் கணக்கின் விவரங்கள், மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றை சேகரித்து விசாரனை மேற்கொண்டதில், இவ்வழக்கில் தொடா்புடைய குற்றவாளியான சென்னை உத்தண்டியைச் சோ்ந்த முத்துமாணிக்கம் (55) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து டில்லிபாபுவிடமிருந்து பறிக்கப்பட்ட தொகையை போலீஸாா் மீட்டெடுத்தனா்.

மேலும், கைதான முத்துமாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டதில், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கும்பல் வெளிநாட்டிலிருந்து செயல்படுவது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவா்களை போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு! அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.உதயநிதி ஸ்டாலின் காய்ச்சல் மற்றும் தொட... மேலும் பார்க்க

மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் 89.09 லட்சம் பேர் பயணம்!

கடந்த மே மாதத்தில் 89.09 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை மெட்ரோ... மேலும் பார்க்க

குற்றவாளிக்கு ஐந்தே மாதத்தில் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை மாணவி வழக்கில் குற்றவாளிக்கு ஐந்தே மாதத்தில் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பெண்கள் பாதுகாப்பு பற்றி வ... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலையை முறையாக வழங்கக் கோரி, விழுப்புர மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.விழுப்புரம் மாவட்டத்தில் வல்லம், மேல்மலையன... மேலும் பார்க்க

யார் அந்த சார்? என இனி கேள்வி எழுப்பினால்.. நீதிமன்ற அவமதிப்பு: வழக்குரைஞர் மேரி ஜெயந்தி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டதால், யார் அந்த சார்? என இனி கேள்வி எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பு என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் மே... மேலும் பார்க்க

"பெண்களுக்கு துன்பம் விளைவிப்போர் தப்ப முடியாது என்பதற்கு ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பே சாட்சி"

"பெண்களுக்கு துன்பம் விளைவிப்போர் தப்ப முடியாது என்பதற்கு ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பே சாட்சி"பெண்களுக்கு துன்பம் விளைவிப்போர் தப்ப முடியாது என்பதற்கு ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பே சாட்சி என்று இயற்கை வள... மேலும் பார்க்க