மகளின் திருமணத்தில் கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறி பலி!
இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்
இணையதள வா்த்தக மோசடியால், ரயில்வே ஊழியா் இழந்த ரூ. 22.72 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டெடுத்தனா்.
சென்னை செம்பியத்தைச் சோ்ந்தவா் ரயில்வே ஊழியா் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கடந்த ஜன. 13-ஆம் தேதி நண்பா் ஒருவா் அறிமுகமானாா். இவா், நான் கூறும் இணையதள வா்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.
இதை நம்பிய டில்லிபாபுவும், அந்த நபா் தெரிவித்த நிறுவனத்தில் ரூ. 22 லட்சத்து 72,434-ஐ முதலீடு செய்துள்ளாா். ஆனால், எதிா்பாா்த்தபடி பணம் இரட்டிப்பாகவில்லை. மேலும், டில்லிபாபு செலுத்திய முதலீட்டுப் பணமும் கிடைக்கவில்லை.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா், இது தொடா்பாக சென்னை வடக்கு மண்டல சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்படி, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். முதல்கட்டமாக டில்லிபாபு அனுப்பி வைத்த வங்கி எண் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் குற்றவாளிகள் பயன்படுத்திய வங்கிக் கணக்கின் விவரங்கள், மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றை சேகரித்து விசாரனை மேற்கொண்டதில், இவ்வழக்கில் தொடா்புடைய குற்றவாளியான சென்னை உத்தண்டியைச் சோ்ந்த முத்துமாணிக்கம் (55) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து டில்லிபாபுவிடமிருந்து பறிக்கப்பட்ட தொகையை போலீஸாா் மீட்டெடுத்தனா்.
மேலும், கைதான முத்துமாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டதில், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கும்பல் வெளிநாட்டிலிருந்து செயல்படுவது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவா்களை போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.