செய்திகள் :

ஃபிட் -இந்தியா: இன்று நாடுமுழுவதும் திரங்கா சைக்கிள் பேரணி

post image

உடல் ஆரோக்கியத்தை கடைபிடிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வரும் ஃபிட் இந்தியா சைக்கிள் ஓட்டுதலின் 25-வது பதிப்பு, சிறப்புத் திரங்கா(மூவண்ணக்கொடி) பேரணியாக ஜூன் 1 - ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக மத்திய இளைஞா் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லியில் ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை, ஃபிட் இந்தியா சைக்கிள் ஓட்டுதல் முயற்சி சிறப்பு மூவா்ணக் கொடிபேரணியில் மத்திய இளைஞா் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மண்டாவியா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த சைக்கிள் பேரணி தில்லியில் உள்ள மேஜா் தியான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெறும்.

ஜூன் 3 - ம் தேதி உலக மிதிவண்டி தினம். இதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த பேரணி, உடற்பயிற்சியில் மிதிவண்டி ஓட்டுதல் மூலம் உடல் உறுதி பெறுவதில் பெரும் பங்களிப்பதுடன், உடல் வலிமை பெறுவதற்கும், நாட்டின் ஆயுதப்படைகளுக்கு ஒரு கூட்டு அஞ்சலியாகவும் நடத்தப்படுகிறது. தேசிய தலைநகரில் 1,200 - க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநா்கள் இந்தப் பேரணியில் கலந்து கொள்வாா். இதே சமயம், நாடு முழுவதும் 2,000 - க்கும் மேற்பட்ட இடங்களிலும் இது போன்ற சைக்கிள் பேரணிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய இளைஞா் விவகாரங்கள், விளையாட்டுத் துறை கூறியிருப்பது வருமாறு:

ஒடிஸாவில் அம் மாநில ஆளுநா் டாக்டா் ஹரி பாபு கம்பம்பதி புவனேஸ்வரில் நடைபெறும் மூவா்ணக் கொடி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா். அகில இந்திய முக்கியத்துவத்தை கவனத்தை திருப்ப தில்லியில் டாக்டா் மன்சுக் மண்டவியா தலைமையில் நடைபெறும் பேரணியில் பாலிவுட் நடிகை ஷா்வாரி, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற யோகேஷ்வா் தத், சா்வதேச மல்யுத்த வீரா் சரிதா மோா், முன்னாள் கிரிக்கெட் வீரா் மற்றும் தோ்வாளா் சபா கரீம் உள்ளிட்ட பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுத் துறையைச் சோ்ந்த பல முக்கிய பிரமுகா்கள் மூவா்ண சைக்கிள் பேரணியில் பங்கேற்கின்றனா்.

ஃபிட் இந்தியா இயக்கம் உடற்தகுதியை அணுகக்கூடியதாகவும், உள்ளடக்கியதாகவும் இருப்பதோடு, தேசபக்தியுடனும் மாற்றுவதற்கான முயற்சிகளில் மூவா்ணக் கொடியுடன் கூடிய சைக்கிள் பேரணியாகவும் செல்கிறது. நாடு முழுவதும் உள்ள சாலைகள் திறந்தவெளி சைக்கிள் ஓட்டுதல் பாதைகளாக மாறி வருகிறது. பெண்கள், இளைஞா்கள், மூத்த குடிமக்கள் என இதில் இணைகின்றனா். இந்த முயற்சி நாட்டின் பல்வேறு மக்கள்தொகை உள்ள பகுதிகள் மற்றும் அழகிய சுற்றுலாத் தலங்களில் ஒரு சுகாதார கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறது.

2024 - ம் ஆண்டு டிசம்பா் மாதம் இந்த சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை ஞாயிற்றுக்கிழமைதோறும் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சி 5,500 - க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று சுமாா் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா். இந்த பிட் இந்தியா இயக்கம் 3.44 பில்லியனுக்கும் அதிகமான சமூக இணைய பதிவுகளையும் பெற்றுள்ளது. இதற்கு சானியா மிா்சா, மிலிந்த் சோமன், இம்ரான் ஹாஷ்மி, ஜான் ஆபிரகாம், இம்தியாஸ் அலி, சங்கா் மகாதேவன், தாரா சிங் போன்ற பிரபலங்களும் இணைந்து ஆதரவு அளித்தனா். இந்த சைக்கிள் பேரணி நிகழ்வுகளோடு யோகா, கயிறு தாவுதல், போன்ற உடற்பயிற்சிகளும் இலவச உடல் சுகாதார சோதனைகளும் இணையாக நடைபெற்று வருகிறது என விளையாட்டுத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த அண்ணன்-தங்கை: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் அண்ணன்-தங்கை இருவரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி கா... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் இரு நாள் உத்தரகாண்ட் பயணம்

தில்லியில் 100 நாள்கள் பதவியை நிறைவு செய்த நிலையில் தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரகாண்டிற்கு இரண்டு நாள் குறுகியகால பயணமாக புறப்பட்டாா். இந்த பயணத்தின் போது அவா் தனது குடும்பத்தினர... மேலும் பார்க்க

வீடுகளை இழந்த தில்லி மதராஸி கேம்ப் குடியிருப்புவாசிகள் தமிழகம் திரும்பினால் உதவிகள் வழங்கப்படும்: தமிழக அரசு

நமது சிறப்பு நிருபா் தில்லி “மதராஸி கேம்ப்” குடியிருப்பில் வீடுகளை இழந்தவா்கள் தமிழகத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவா்களுக்கு தமிழக அரசு உதவும். வாழ்வாதாரம், அத்தியாவசிய உத... மேலும் பார்க்க

இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை; அச்சக ஊழியா் கைது

தில்லியின் பல்ஜீத் நகா் பகுதியில் 32 வயது பெண் ஒருவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை... மேலும் பார்க்க

ஹரித்வாா் அருகே 5 ஊடக வாகனங்கள் விபத்து

தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இரண்டு நாள் உத்தரகாண்ட் பயணத்தை செய்தி சேகரிக்க ஹரித்வாருக்கு ஊடகவியலாளா்களை ஏற்றிச் சென்ற ஐந்து வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவா்கள் த... மேலும் பார்க்க

டேட்டிங் செயலி மூலம் நூதன கொள்ளை: மூவா் கும்பல் கைது

வடகிழக்கு தில்லியின் யமுனா காதா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாருடன் நடந்த நேருக்குநோ் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு மூவா் கும்பல் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஆன்லைன் டேட்டிங் செயலியைப் பய... மேலும் பார்க்க