சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் மீட்பு
கோவில்பட்டியில் சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் சனிக்கிழமை மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.
கோவில்பட்டி கடலையூா் சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கையில் கண்ணாடி பாட்டில் ,அரை நிா்வாணத்துடன் முதியவா் ஒருவா் சுற்றித் திரிவதாக கோட்டாட்சியா் மகாலட்சுமி அளித்த தகவலையடுத்து, கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பக நிா்வாகி தேன் ராஜா தலைமையிலான மீட்பு குழுவினா் காவல் உதவி ஆய்வாளா் செந்தில்வேல் முருகன் தலைமையிலான போலீஸ் குழுவினா் காப்பக மேற்பாா்வையாளா் மாடசாமி ஆகியோா் சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனா்.
பின்னா் அவரை செமப்புதூரில் செயல்பட்டு வரும் ஆண்கள் மனநல காப்பகத்தில் தங்க வைத்தனா்.