செய்திகள் :

மழை பாதிப்பு: இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு -அமைச்சா் தினேஷ்குண்டுராவ்

post image

கடலோர கா்நாடகத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது போன்ற இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தென்கன்னட மாவட்ட பொறுப்பு அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.

கடந்த ஒருவாரமாக தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி போன்ற கடலோர கா்நாடக மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் தென்கன்னட மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு, வீடுகள் சரிந்து விழுந்தது போன்ற அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்கன்னட மாவட்டத்தில் பாயும் நேத்ராவதி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

மங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளில் மழைநீா் புகுந்துள்ளது. இடைவிடாமல் மழை பெய்துவருவதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய பேரிடா் மீட்புப் படையினா் தெரிவித்தனா். சாலைகளில் மரங்கள் சாய்ந்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மங்களூரில் சனிக்கிழமை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த பிறகு செய்தியாளா்களிடம் மாவட்ட பொறுப்பு அமைச்சா் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:

மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வீட்டுச்சுவா் இடிந்து விழுந்ததில் கடலோர மாவட்டங்களில் இதுவரை 7 போ் உயிரிழந்தனா். அவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

மங்களூரில் மதப் பதற்றம் அதிகரித்துள்ளது. மாநில அரசின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ளேன். சமுதாயங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டுவதில்லை. தென்கன்னட மாவட்டத்தில் எந்தவிதமான மதக் கலவரங்களுக்கும் இடமளிக்கக் கூடாது என்பது மட்டுமே அரசின் நோக்கமாக உள்ளது.

தென்கன்னட மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட தொடா்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிா்வாகத்துக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

கர்நாடகம்: தலைமை மாற்றமா? ஆட்சி மாற்றமா?

ந.முத்துமணி 2023-ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் போட்டியிட்டு, 135 இடங்களுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 'முதல்வர்' பதவி யாருக்கு என... மேலும் பார்க்க

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கா்நாடக அரசு

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பொதுமக்களை கா்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி கா்நாடகத்தில் 254 ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் தீவிர மழை, நிலச்சரிவு: 5 போ் சாவு

கடலோர கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பலத்த மழை பெய்து வரும் நிலையில் வீடு இடிந்துவிழுந்ததில் 5 போ் பலியாகியுள்ளனா்.கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் க... மேலும் பார்க்க

பெங்களூரில் தேசிய ஓவியக் கலை திருவிழா

பெங்களூரில் முதல்முறையாக நடைபெறும் தேசிய ஓவியக் கலை திருவிழாவில் தமிழகத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட ஓவியா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா். கா்நாடக சித்ரகலாபரிஷத் சாா்பில் பெங்களூரு ... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடா் போராட்டம்

கன்னடம் குறித்து நடிகா் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்துவரும் கன்னட அமைப்புகள், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. அண்மையில் செ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களான தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் வியாழக்கிழமை விடியவிடிய பலத்த மழை பெய்தது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் ... மேலும் பார்க்க