செய்திகள் :

கேரளத்தில் நாட்டுப் படகு கவிழ்ந்து 2 பேர் பலி

post image

கேரளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது நாட்டுப் படகு கவிழ்ந்ததில் 2 பலியானார்கள்.

தெற்கு கேரள மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் நாட்டுப் படகில் வெள்ளிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த படகு திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜோபி வி.ஜே (36) மற்றும் அருண் சாம் (37) ஆகியோர் பலியாகினர். அவர்களுடன் இருந்த ஜோஷி உயிர் தப்பினர்.

ரோஹித் சர்மா அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 229 ரன்கள் இலக்கு!

பலியான ஜோபியின் சகோதரர்தான் ஜோஷி. இந்த சம்பவம் பிற்பகல் 2 மணியளவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​படகு திடீரென கவிழ்ந்தது. நீச்சல் தெரிந்த ஜோஷி நீந்தி பாதுகாப்பான இடத்திற்குச் சென்றார்.

நீச்சல் தெரியாத ஜோபி மற்றும் அருண் ஆகியோர் படகை சிறிது நேரம் பிடித்துக்கொண்டிருந்தனர். அது மூழ்கவும் அவர்களும் மூழ்கி பலியாகிவிட்டனர். உள்ளூர்வாசிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் நடத்திய தேடுதலுக்குப் பிறகு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க

அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 போ் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா... மேலும் பார்க்க

மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் யூனியன் பிரதேசம்: குகி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்

குகி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூக குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடா்பாக புது தில்லியில் குகி-ஜோ பெண்கள் அமைப்பின... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் உயிரிழப்புகளுக்கு இரங்கல்: இந்தியா அதிருப்தியால் கொலம்பியா வாபஸ்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், இந்தியா மேற்கொண்ட தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியா மீது அந்நாட்டில் சசி தரூா் அதிருப்தி தெ... மேலும் பார்க்க