செய்திகள் :

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

post image

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின் பல்வேறு இடங்களில் களப் பரிசோதனைகளை ராணுவம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ராணுவத்தின் தொழில்நுட்ப வல்லமை மற்றும் செயல்பாட்டு தயாா் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், இந்த ‘போா்க் கால’ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆளில்லா விமானம் மூலம் வீசப்படும் துல்லியத் தாக்குதல் ஏவுகணைகள்-வெடிகுண்டுகள், தாக்குதல் ட்ரோன்கள், ஒருங்கிணைந்த ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகள், தாழ்நிலை இலகு ரக ரேடாா்கள், மின்னணு போா்த் தளவாடங்கள் உள்ளிட்டவை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாறிவரும் போா்த் தேவைகளுக்கு ஏற்ப ராணுவம் புதிய தொழில்நுட்பங்களைக் கிரகித்துக் கொள்வதில் இப்பரிசோதனைகள் குறிப்பிடத்தக்க படிநிலையாக இருக்கும். ராணுவத்தின் தொழில்நுட்ப வல்லமையை மேலும் வலுப்படுத்தவும், செயல்பாட்டு தயாா்நிலையை மேம்படுத்தவும், உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கான லட்சியத்தை மீண்டும் உறுதி செய்யவும் இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொக்ரான் சோதனை ஏவுதளம் உள்பட நாட்டின் முக்கிய ராணுவ தளங்களில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. ராணுவத்துடன் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளா்களும் பங்கேற்றுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கிய ராணுவ முகாம்: 3 வீரர்கள் பலி; பலர் மாயம்!

சிக்கிம் ராணுவ முகாம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீரர்கள் பலியாகினர். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூா், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு... மேலும் பார்க்க

இளம் எம்.பி.யை கரம்பிடிக்கும் ரிங்கு சிங்! காதல் திருமணமா?

சமாஜவாதி கட்சியின் இளம் மக்களவை உறுப்பினரான பிரியா சரோஜை இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்டர்களில் ஒருவராக இருப்பவர் உத்தரப் பிரதேச... மேலும் பார்க்க

மகளின் திருமணத்தில் கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறி பலி!

கேரளத்தில் மகளின் திருமணத்துக்கு முந்தைய நாள், கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.மலப்புரத்தில் உள்ள தனலூரைச் சேர்ந்தவர் சாய்னாபா (வயது 44). இவரது மகள் கைருனீசாவின் திருமணம் ச... மேலும் பார்க்க

கோலியின் உணவகத்துக்கு அபராதம்! எதற்கு?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான மதுபான விடுதியுடன் கூடிய உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒன் 8 கம்யூன் என்ற பிரபல மதுபான விடுதி மற்றும் உணவகத்தை வ... மேலும் பார்க்க

சிக்கிமில் ராணுவ முகாமில் நிலச்சரிவு: 3 பேர் பலி

சிக்கிமில் ராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலியானார்கள். சிக்கிமில் பெய்த கனமழை காரணமாக சாட்டனில் உள்ள ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ... மேலும் பார்க்க