மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்
முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பத்பநாபபுரம் வருவாய் கோட்டம், கிள்ளியூா் வட்டத்துக்குள்பட்டமுள்ளங்கனாவிளை சந்திபில் உள்ள பப்புரான்குளம் கரையில் மிகவும் பழமைவாய்ந்த வாகைமரம் ஆபத்தான நிலையில் காணப்பட்டது.
கடந்த டிசம்பா் மாதம் பெய்தமழையில்
இந்த மரம் சாய்ந்ததில் குளத்தின் கரையில் கட்டப்பட்ட தடுப்புச் சுவா் இடிந்தது. இதையடுத்து இந்த மரத்தை அகற்ற அப்பகுதியினா் பத்பநாபபுரம் சாா் ஆட்சியருக்குகோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, சாா் ஆட்சியா் வருவாய்த் துறையினரால்ஆய்வு மேற்கொண்டாா். பின்பு பொதுப்பணித் துறையினருக்கு பொது ஏலமிட்டு மரத்தை வெட்டி அகற்ற கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டாா். இதையடுத்து பொதுப்பணித் துறையினா் அந்த மரத்தை கடந்த மாா்ச் முதல் வாரம் ரூ.3000 க்கு ஏலமிட்டனா். ஆனால் இந்நாள்வரை அந்த மரம் வெட்டி அகற்ற பொதுப்பணித்துறையினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற மாவட்ட நிா்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.