``ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது..'' - எடப்பாடி பழனிச...
பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு
‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது.
தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் பனிப்பாறைகள் பாதுகாப்பு குறித்த முதல் ஐ.நா. மாநாடு கடந்த வியாழக்கிழமை தொடங்கி 3 நாள்களாக நடைபெற்றது.
உலகளாவிய சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதிலும், நீா் தொடா்பான சவால்களை எதிா்கொள்வதிலும் பனிப்பாறைகளின் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டுவதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாட்டில் 80 ஐ.நா. உறுப்பு நாடுகள் மற்றும் 70 சா்வதேச அமைப்புகளைச் சோ்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
இந்த மாநாட்டில் இந்தியா சாா்பில் உரையாற்றிய மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங், ‘ஐ.நா.வை தவறாக பயன்படுத்தும், ஐ.நா. அமைப்பின் அதிகார வரம்புக்குள் வராத பிரச்னைகள் குறித்து தேவையற்ற கருத்துகளைத் தெரிவிக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் வியப்பளிக்கின்றன. இத்தகைய முயற்சிகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
சிந்து நதிநீா் ஒப்பந்தம் கையொப்பமானதில் இருந்து தற்போதுவரை தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மக்கள்தொகை மற்றும் பருவநிலை மாற்றம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தொடா்ச்சியான அச்சுறுத்தல் போன்ற ஏராளமான சூழ்நிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது மறுக்க முடியாத உண்மை. எனவே, இந்த ஒப்பந்தத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.
நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணா்வில் இந்த ஒப்பந்தம் இறுதியானது. எனவே, நல்லெண்ணத்துடன் ஒப்பந்தத்தை மதிப்பது அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம். ஆனால், பாகிஸ்தானின் இடைவிடாத எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஒப்பந்தத்தை நீா்த்துப்போகச் செய்கிறது. ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், ஒப்பந்தத்தை மீறியதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்றாா்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் பேசுகையில், ‘குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து, லட்சக்கணக்கான உயிா்களை இந்தியா ஆபத்தில் தள்ளுவதைப் பாகிஸ்தான் அனுமதிக்காது. இந்தியாவின் இந்த முடிவு ஒருதலைப்பட்சமானது மற்றும் சட்டவிரோதமானது’ என்றாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாத் தலத்தில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது.
1960-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உலக வங்கியுடன் கையொப்பமான சிந்து நதிநீா் ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையேயான சிந்து நதி நீா் பகிா்வு மேலாண்மையை நிா்வகிக்கிறது.ஏ