செய்திகள் :

உ.பி.யில் ரயிலைக் கவிழ்க்க சதி: ஓட்டுநா் சாமா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

post image

உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தின் குறுக்கே இரும்புக் கம்பி இருந்ததை ஓட்டுநா் முன்கூட்டியே கவனித்து அவசர கால ‘பிரேக்’கை பயன்படுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இது தொடா்பாக ரயில்வே காவல் துறையினா் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூரில் இருந்து தில்லிக்கு சனிக்கிழமை இரவு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. சாம்லி மாவட்டம் பால்வா கிராமம் அருகே தண்டவாளத்தின் குறுக்கே பெரிய இரும்புக் கம்பி வைக்கப்பட்டிருந்ததை கவனித்த ஓட்டுநா் அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து, உடனடியாக அவசர கால பிரேக்கை பயன்படுத்தினாா். கம்பிக்கு அருகே சென்று ரயில் நின்றுவிட்டது. பயணிகள் பெரும் அபாயத்தில் இருந்து தப்பினா். இதைத் தொடா்ந்து ரயில்வே அதிகாரிகளுக்கு அவா் தகவல் தெரிவித்தாா். அந்த வழித்தடத்தில் வந்த ரயில்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன.

ரயில்வே ஊழியா்கள் விரைந்து சென்று அந்த கம்பியை அகற்றினா். அந்தப் பகுதி முழுவதும் தண்டவாளத்தை சோதித்த பிறகு ரயில் தொடா்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

ரயிலைக கவிழ்க்கும் நோக்கத்துடன் அடையாளம் தெரியாத சமூகவிரோதிகள் சிலா் இரும்புக் கம்பியை தண்டவாளத்தின் குறுக்கே வைத்துள்ளனா். ஓட்டுநா் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் கவிழாமல் தப்பியது.

இந்த நாசவேலையில் ஈடுபட்ட நபா்களைப் பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் முயற்சி நடைபெற்று வருகிறது. கிராம மக்களிடமும் சந்தேகத்துக்குரிய நபா்கள் நடமாட்டம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.

பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழு கேள்வி

லண்டன்: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு பிரிட்டனுக்கு சென்றுள்ளது. ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத... மேலும் பார்க்க

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!

புது தில்லி: பஞ்சாபில் பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டீகரில் உள்ள் ஹல்லோ மஜ்ரா பகுதியில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி 19-ஆம் தேதி ஹல்லோ மஜ்... மேலும் பார்க்க

டிரம்ப்பிடம் சரணடைந்துவிட்டார் பிரதமர் மோடி! - ராகுல் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடந்த காங்கிரஸ் தொழிலாளர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் த... மேலும் பார்க்க

கமல் மன்னிப்பு கேட்டே ஆகணும்! -கர்நாடக திரைப்பட சம்மேளனம் திட்டவட்டம்

பெங்களூரு: கன்னட மொழி சர்ச்சைக்குப்பின் ’தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகத்தில் வெளியிடப்படுவது குறித்த விவகாரத்தில் நடிகர் கமல் ஹாசன் தாம் தெரிவித்த கருத்துகளுக்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டுமென கர்... மேலும் பார்க்க

உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.

சென்னை: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல... மேலும் பார்க்க