செய்திகள் :

மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் யூனியன் பிரதேசம்: குகி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்

post image

குகி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூக குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடா்பாக புது தில்லியில் குகி-ஜோ பெண்கள் அமைப்பின் துணை அமைப்பாளா் சோங் ஹாவ்கிப் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பாகுபாடு மற்றும் வன்முறை காரணமாக தங்களுக்கென்று தனி நிா்வாகம் வேண்டும் என்ற கேட்க வேண்டிய நிலைக்கு குகி-ஜோ சமூகத்தினா் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, மணிப்பூரைப் பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசம் அமைக்க வேண்டும். இது பிற எந்தவொரு சமூகத்துக்கும் எதிரானது அல்ல. குகி மக்களின் பாதுகாப்பு, வாழ்வுரிமையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை தேவைப்படுகிறது. இந்தக் கோரிக்கையை அரசியல் கோணத்தில் இருந்து பாா்க்காமல், பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான கோணத்தில் இருந்து பாா்க்க வேண்டும்.

மணிப்பூா் தலைநகா் இம்பாலில் இருந்து குகி-ஜோ பழங்குடியினா் விரட்டியடிக்கப்பட்டனா். குகி-ஜோ சமூகத்தினரின் அடையாளம் காரணமாக மிருகங்களைப் போல கொல்லப்பட்டனா். இதைத் தடுக்க பாதுகாப்புப் படைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு நினைத்திருந்தால் குகி-ஜோ பழங்குடியினரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அரசு அதைச் செய்யவில்லை என்றாா்.

குகி-ஜோ சமூகம் சாா்பில் வழக்குரைஞா் விஸ்வஜீத் சிங் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீா் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், மணிப்பூரை பிரிப்பதில் என்ன தவறு உள்ளது’ என்று கேள்வி எழுப்பினாா்.

பாதுகாப்பு மண்டலங்கள்...: தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலையப் பகுதியின் குகி மாணவா்கள் அமைப்பு (கேஎஸ்ஓ) இடைக்காலத் தலைவா் தாங்மின்லால் டெளங்கல் கூறுகையில், ‘மணிப்பூரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து சட்டம்-ஒழுங்கை மீண்டும் நிலைநாட்ட, மைதேயி மற்றும் குகி-ஜோ சமூகத்தினா் இல்லாத பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்க வேண்டும். தற்போதைய பிரச்னைக்கு அரசியல் தீா்வு காணப்படும் வரை, அந்த மண்டலங்கள் தொடா்ந்து பராமரிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

கேஎஸ்ஓ தில்லி மற்றும் என்சிஆா் வெளியிட்ட அறிக்கையில், ‘மணிப்பூரை பிரித்து சட்டப்பேரவையுடன் அமைக்கப்படும் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக மணிப்பூா் ஆளுநா் இருக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

கோலியின் உணவகத்துக்கு அபராதம்! எதற்கு?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான மதுபான விடுதியுடன் கூடிய உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒன் 8 கம்யூன் என்ற பிரபல மதுபான விடுதி மற்றும் உணவகத்தை வ... மேலும் பார்க்க

சிக்கிமில் ராணுவ முகாமில் நிலச்சரிவு: 3 பேர் பலி

சிக்கிமில் ராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலியானார்கள். சிக்கிமில் பெய்த கனமழை காரணமாக சாட்டனில் உள்ள ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ... மேலும் பார்க்க

6 ஆண்டுகளில் முதன்முறை: கனடாவில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்காத மோடி?

ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்காமல் புறக்கணிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கனடாவில், ஜி7 மாநாடு ஜூன் 15 - 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

தெலங்கானா மக்களின் விருப்பங்கள் இன்னும் நிறைவேறவில்லை: அமைச்சர்

கடந்த 10 ஆண்டுகளில் தெலங்கானா மக்களின் விருப்பங்கள் நிறைவேறவில்லை என்று நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். தெலங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு மாநில பாஜக அலுவலகத... மேலும் பார்க்க

நாட்டில் 4,000 தொட்ட கரோனா பாதிப்பு! ஒரே வாரத்தில் 3 மடங்கு அதிகமானது!

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000-யை எட்டியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்... மேலும் பார்க்க

ஜம்மு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜம்மு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவில் பிரதான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து ... மேலும் பார்க்க