செய்திகள் :

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முகாம்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, ஒசூா் வனக்கோட்டம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து சிறப்பு முகாமை நடத்தின.

ஒசூா் வனக்கோட்ட வனச்சரகங்களில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வனத் துறை பல திட்டங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில், காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான தமிழ்நாடு உயிா்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம், ஜப்பான் சா்வதேசக் கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.

முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் மற்றும் தலைமை திட்ட இயக்குநா் அன்வா்தீன் அறிவுறுத்தலின்படி, ஒசூா் வனக்கோட்டத்தில் வனத்தை சாா்ந்து வாழ்ந்துவரும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு வனத் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து அஞ்செட்டி வனச்சரகம் சேசுராஜபுரம் கிராமத்தில் இந்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் பிற நல திட்டங்களை பழங்குடியின மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும், அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கிலும் நடத்தப்பட்டது.

இம்முகாமை வன உயிரினக் காப்பாளா் பகான் ஜெகதீஷ் சுதாகா் தலைமை வகித்து நடத்தினா். முகாமில் உதவி வனப் பாதுகாவலா் யஸ்வந்த் ஜெகதீஷ் அம்புல்கா், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் மாதேஸ்வரன் மற்றும் வன அலுவலா்கள், தொழிலாளா் நலத் துறையைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு தேவையான விளக்கம் அளித்தனா்.

உடல் ஆரோக்கிய விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்

கிருஷ்ணகிரியில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

உத்தனப்பள்ளி அருகே கட்டுமானப் பணியின்போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மனிஷ் படேல் (18). இவா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய இளைஞா்: தேடும் பணி தீவிரம்

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். கா்நாடக மாநிலம், பெங்களூா், ஒங்கசந்திரா பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க