வாகன உதிரிபாகம் தலையில் விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
வாகன உதிரிபாகங்கள் தலையில் விழுந்ததில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் பிரதேஷ் சவுகான் (24). இவா் ஒசூா், ஆலூா் பகுதியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா். இந்தநிலையில் கடந்த 29-ஆம் தேதி இரவு அவா் அந்த நிறுவனத்தில் இரும்புக் குழாய்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக உதிரிபாகங்கள் அவரின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு பிரதேஷ் சவுகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்த அட்கோ போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஒசூா் அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.