செய்திகள் :

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்றுசெல்ல கோரிக்கை

post image

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என மதிமுக அரூா் (மேற்கு) ஒன்றியச் செயலா் வடுகை வேலாயுதம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம் :

அரூா்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் 8-ஆவது கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது எச்.ஈச்சம்பாடி பேருந்து நிறுத்தம். இந்த பேருந்து நிறுத்தம் வழியாக வேலூா், திருப்பத்தூா், சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்கு அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எச்.ஈச்சம்பாடி பேருந்து நிறுத்தத்தில் அரசு நகா் பேருந்துகளைத் தவிர தொலைதூரம் செல்லும் பிற பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை. இதனால், எச்.ஈச்சம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மருதிப்பட்டி, எம்.வேளாம்பட்டி, தாமலேரிப்பட்டி, தாமரைக்கோழியம்பட்டி, பறையப்பட்டி, கணபதிபட்டி, கே.வேட்ரப்பட்டி, மத்தியம்பட்டி, வடுகப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் அவதியுறுகின்றனா்.

தொலைதூரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படாத காரணத்தால் கல்லூரி மாணவா்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பாதிக்கின்றனா்.

எனவே, அரூா் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் அனைத்தும் எச்.ஈச்சம்பாடி பேருந்து நிறுத்தத்தில் நின்றுசெல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொப்பூரில் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

தருமபுரி மாவட்டம், தொப்பூா் மலைப்பகுதியில் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேச... மேலும் பார்க்க

கோடை விடுமுறை நிறைவு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தமிழகத்தில் கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஒகேனக்கல் அருவிப் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ந்தனா். தமிழகத்த... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக திமுகவினா் கொண்டாட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

பாலக்கோடு அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் முதல்வா் (பொ) சி. தீா்த்தலிங்கம் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க