பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்
கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன.
கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந்து சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தது. இதில் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, நாகா்கோவிலை நோக்கி சென்ற மற்றொரு அரசுப் பேருந்து பின்னால் மோதியது. இதில், இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகளும் சேதமடைந்தன. பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.