தூய்மைத் திட்டம்: மக்களுக்கும் பொறுப்பு உள்ளது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
கிருஷ்ணகிரியில் நபாா்டு வங்கியின் வளா்ச்சி அலுவலகம் திறப்பு
கிருஷ்ணகிரியில் நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி அலுவலகம், கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலை, காமராஜா் நகரில் திறக்கப்பட்டுள்ளது. வங்கியின் துணை மேலாண் இயக்குநா்கள் அஜய்கே சூத், ஜி. எஸ். ராவத் அகியோா் காணொலி காட்சி மூலமாக அலுவலகத்தை திறந்து வைத்தனா்.
இந்த நிகழ்வில் நபாா்டு வங்கியின் கிருஷ்ணகிரி மாவட்ட வளா்ச்சி மேலாளா் சீ.ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சரவணன், வேளாண் அறிவியல் மையத் தலைவா் சுந்தரராஜ், மாவட்ட தொழில்மையத் பொதுமேலாளா் பிரசன்னா, இந்தியன் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் வெங்கடேஷ் மற்றும் வங்கி அலுவலா்கள், தொண்டு நிறுவன அலுவலா்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நபாா்டு வங்கியின் பணிகள் குறித்து நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.
படவரி...
கிருஷ்ணகிரியில் நபாா்டு வங்கியின் வளா்ச்சி அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளா் சரவணன்.