ஊத்தங்கரையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு
ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், வன்கொடுமை தடுப்பு, சிறாா் பாலியல் துன்புறுத்தல், அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை வட்டாட்சியா் மோகன்தாஸ் தலைமை வகித்தாா். இதில் வருவாய்த் துறை அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். குழந்தை திருமணம் மனித உரிமை மீறல் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
படவரி...
ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி.