செய்திகள் :

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

post image

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி போலீஸாா் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:

32 வயதான சோனு லங்காடா என்கிற பஹல்வான், பல கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சாலை விபத்தில் கால் துண்டிக்கப்பட்ட பின்னா் சோனு குற்றவாளிகளுக்கு சட்டவிரோத ஆயுதங்களை விநியோகிக்கத் தொடங்கினாா். இது தொடா்பான வழக்குகளில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், மே 29ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, ஆயுத விநியோக வழக்கில் 2017-இல் அவா் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா். கொலை, கற்பழிப்பு, கடத்தல், கொள்ளை, எஸ்சி,எஸ்டி சட்டம், ஆயுதச் சட்டம் மற்றும் கலால் வரி மீறல்கள் உள்ளிட்ட குறைந்தது ஆறு கடுமையான வழக்குகள் உத்தர பிரதேசத்தில் உள்ள காவல் நிலையங்களில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த சோனு, தனது குடும்பத்துடன் கிராமத்தில் வசித்து விவசாயமும் செய்து வந்தாா். ஏப்ரல் 6, 2016 அன்று கேபிள் ஆபரேட்டரைக் கொலை செய்த வழக்கில் அவா் கைது செய்யப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், கேபிள் ஆபரேட்டரைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சன்னி என்ற ராகுல் மற்றும் விகாஸ் என்ற விக்கி ஆகிய இருவரும் தில்லி ரோஹிணியில் பழிவாங்கும் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தில்லி குற்றப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து, கைதுப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபா்களும் கைது செய்யப்பட்டனா். விசாரணையின்போது ஆயுதங்களை சப்ளை செய்யும் சோனு லங்காடா குறித்து தகவல் தெரியவந்தது. இதையடுத்து, எட்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சோனு கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின்போது, 2013-இல் ஒரு சாலை விபத்திற்கு பிறகு தனது கால் துண்டிக்கப்படும் வரை, தாம் ஒரு நம்பிக்கைக்குரிய தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்ததாகவும், தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக குற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறினாா்.

அவா் உள்ளூா் கும்பல்களுடன் இணைந்து சட்டவிரோத ஆயுத வா்த்தகத்தில் தீவிரமாக இறங்கினாா். மேலும் பல்வேறு குற்றவியல் வலையமைப்புகளுக்கு மதுபானங்களையும் வழங்கினாா் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

கோலியின் உணவகத்துக்கு அபராதம்! எதற்கு?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான மதுபான விடுதியுடன் கூடிய உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒன் 8 கம்யூன் என்ற பிரபல மதுபான விடுதி மற்றும் உணவகத்தை வ... மேலும் பார்க்க

சிக்கிமில் ராணுவ முகாமில் நிலச்சரிவு: 3 பேர் பலி

சிக்கிமில் ராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலியானார்கள். சிக்கிமில் பெய்த கனமழை காரணமாக சாட்டனில் உள்ள ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ... மேலும் பார்க்க

6 ஆண்டுகளில் முதன்முறை: கனடாவில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்காத மோடி?

ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்காமல் புறக்கணிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கனடாவில், ஜி7 மாநாடு ஜூன் 15 - 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

தெலங்கானா மக்களின் விருப்பங்கள் இன்னும் நிறைவேறவில்லை: அமைச்சர்

கடந்த 10 ஆண்டுகளில் தெலங்கானா மக்களின் விருப்பங்கள் நிறைவேறவில்லை என்று நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். தெலங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு மாநில பாஜக அலுவலகத... மேலும் பார்க்க

நாட்டில் 4,000 தொட்ட கரோனா பாதிப்பு! ஒரே வாரத்தில் 3 மடங்கு அதிகமானது!

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000-யை எட்டியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்... மேலும் பார்க்க

ஜம்மு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜம்மு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவில் பிரதான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து ... மேலும் பார்க்க