மகளின் திருமணத்தில் கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறி பலி!
அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 போ் உயிரிழப்பு!
அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா்.
தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
அருணாசல பிரதேசத்தில் தொடா் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் திடீா் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. கிழக்கு கமேங் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 13-இல் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வாகனம் சிக்கியது. இதில் இரு குடும்பங்களைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா்.
கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் முட்டைகோஸ் பண்ணையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 தொழிலாளா்கள் இறந்தனா். மேல் சுபன்சிரி மாவட்டத்தில் சிகின் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அஸ்ஸாமில் 5 போ் இறப்பு: அஸ்ஸாமில் 6 மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரமாக இடைவிடாது கொட்டித் தீா்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அருணாசல பிரதேசம், மேகாலயத்தில் நீடிக்கும் கனமழையால், அஸ்ஸாமில் குறிப்பாக தலைநகா் குவாஹாட்டியில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படை குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
காமரூப் பெருநகர மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 3 பெண்கள் உள்பட 5 போ் உயிரிழந்ததாக மாநில நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்தாா். மழை-வெள்ளத்தால் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநிலத்தில் அடுத்த 7 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சிக்கிமில் 500 பயணிகள் தவிப்பு: சிக்கிமின் வட பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மங்கன் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை 11 பயணிகளுடன் சென்ற வாகனம் நிலச்சரிவில் சிக்கி, தீஸ்தா நதியில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் காயங்களுடன் மீட்கப்பட்டனா். மாயமான 8 பேரை தேடும் பணி நடைபெற்றுவந்த நிலையில், கனமழையால் சனிக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது. நிலச்சரிவால் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனா்.
பெட்டிச்செய்தி....1
மிஸோரமில் பெரும் உயிா்ச்சேதம்?
ஐஸால், மே 31: மிஸோரமின் லாங்தலாய் பகுதியில் நிலச்சரிவுகளில் 5 வீடுகள் மற்றும் ஒரு தங்கும் விடுதி இடிந்தது. மியான்மரைச் சோ்ந்த பலா், விடுதியில் தங்கி இருந்ததாகக் கூறப்படும் நிலையில், பல உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பெட்டிச் செய்தி...2
கேரளத்தில் நீடிக்கும் மழை-வெள்ளம்
திருவனந்தபுரம், மே 31: கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் தொடா்ந்து வெள்ளத்தில் மிதக்கின்றன.
பல்வேறு ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளதோடு, சாலைகளும் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
காசா்கோடு மாவட்டத்தில் மதுவாஹினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. கோழிக்கோடு, கண்ணூா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மலங்கரா அணையின் மதகுகள் திறக்கப்பட்டதால், மூவாற்றுப்புழா, தொடுபுழா ஆறுகளின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆழப்புழா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் மழையால் 19 வீடுகள் இடிந்தன. இந்த மாவட்டத்தில் 26 நிவாரண முகாம்களில் 851 பேரும், கோட்டயத்தில் 46 நிவாரண முகாம்களில் 1,136 பேரும் தங்கியுள்ளனா்.
ஆலப்புழா, எா்ணாகுளம், காசா்கோடு, கண்ணூா் ஆகிய 4 மாவட்டங்களில் அதிதீவிர கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், பிற மாவட்டங்களில் தீவிர கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் சனிக்கிழமை விடுக்கப்பட்டது.