செய்திகள் :

பிரசார நடைப்பயணத்தில் பெண்களுக்கு குங்குமம்? பாஜக மறுப்பு!

post image

பாஜகவின் பிரசார நடைப்பயணத்தில் குங்குமம் வழங்கப்படும் என்று வதந்திக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தைக் கொண்டாடும்விதமாக, ஜூன் 9 ஆம் தேதியில் பாஜகவினர் பிரசார நடைப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், இந்த பிரசார நடைப்பயணத்தின்போது, வீடுவீடாகச் சென்று பெண்களுக்கு குங்குமம் வழங்கவும் பாஜகவினர் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது.

கட்சியிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், குங்குமம் வழங்கும் திட்டம் முறையானதல்ல என்று பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், வீடுவீடாகச் சென்று பெண்களுக்கு பாஜகவினர் குங்குமம் வழங்கவிருப்பதாக பரவும் செய்திகள் வெறும் வதந்தி மட்டுமே. அதில் உண்மைத்தன்மை எதுவுமில்லை என்று பாஜக தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களுக்கு அவர்களின் கணவர் மட்டுமே குங்குமம் அளிக்க வேண்டும் என்றும், மற்றவர்கள் அளிப்பது என்பது குங்குமத்துக்கான மரியாதைக்குரியதாக இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதனிடையே, பிரதமர் மோடியை குற்றம் சாட்டிய திரிணமூல் காங்கிரஸ் மமதா பானர்ஜி கூறுகையில், கணவரிடமிருந்துதான் பெண்கள் குங்குமத்தைப் பெறுவர். பிரதமர் யாருக்கும் கணவர் அல்லவே. நீங்கள் ஏன் முதலில் உங்கள் மனைவிக்கு குங்குமம் அளிக்கவில்லை என்று விமர்சித்தார்.

இந்த நிலையில், மமதா பானர்ஜியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் சம்பித் பத்ரா, இதுவரை எந்தவொரு அரசியல்வாதியோ மக்கள் பிரதிநிதியோ பேசாததை, மமதா பானர்ஜி பேசியுள்ளார். அனைத்து பெண்களுக்கும் மோடி கணவரா என்று கேட்டுள்ளார். என்ன பேச்சு இதெல்லாம். அவர் அனைவருக்குமான ஒரு சேவகர் மட்டுமே. அவர் ஒரு தந்தையாகவும் சகோதரராகவும் மட்டுமே இருப்பார் என்று கூறினார்.

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க

அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 போ் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா... மேலும் பார்க்க

மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் யூனியன் பிரதேசம்: குகி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்

குகி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூக குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடா்பாக புது தில்லியில் குகி-ஜோ பெண்கள் அமைப்பின... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் உயிரிழப்புகளுக்கு இரங்கல்: இந்தியா அதிருப்தியால் கொலம்பியா வாபஸ்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், இந்தியா மேற்கொண்ட தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியா மீது அந்நாட்டில் சசி தரூா் அதிருப்தி தெ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்தும்வரை ஆபரேஷன் சிந்தூா் தொடரும்: ஜெ.பி.நட்டா

‘இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை முடிந்துவிடவில்லை; பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்தும்வரை அந்த நடவடிக்கை தொடரும்’ என்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரி... மேலும் பார்க்க