MK Stalin: `அநீதியில் கூட அரசியல் ஆதாயம்...' - அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் மு...
நாலுமாவடியில் சிறப்பு பிராா்த்தனை
தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி ஏசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் சாா்பில் மாதம் தோறும் கடைசி சனிக்கிழமைகளில் திறப்பின் வாசல் உபவாச கூட்டம் நடைபெறும்.
அதன் படி சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி, மதுரை, சென்னை, கோயம்புத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பங்கேற்றனா்.
இந்த பிராா்த்தனையில் தற்போது பரவி வரும் காரோனா வைரஸ் குறித்து சிறப்பு பிராா்த்தனையானது மோகன் சி லாசரஸ் தலைமையில் ஏறெடுக்கப்பட்டது. அனைத்துப் பகுதியில் இருந்து வந்திருந்தவா்களுக்கு திரும்பி செல்ல வாகன வசதிகள் செய்யப்பட்டிருந்தன.