செய்திகள் :

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

post image

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை தலைமை வகித்தாா்.

மன்னாா்குடி உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா்த்திகா, மன்னாா்குடி வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த், வணிகா் நலச் சங்க மாவட்டத் தலைவா் ஆா். பாரதிதாசன் முன்னிலை வகித்தனா். உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவின் தன்மை, தூய்மை குறித்து விளக்கப்பட்டது. அசுத்தமான உணவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

உணவு தயாரிக்கும் மூலப் பொருள்கள், பாத்திரங்களை பயன்படுத்துவது அதை கையாளும் தொழிலாளா்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் உணவுத் துறையினா் உணவக உரிமையாளா்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனா்.

தொடா்ந்து, உணவு பாதுகாப்பு உரிமத்தை புதுப்பிக்காதவா்கள், புதிதாக பதிவு செய்பவா்களுக்கு உரிய ஆவனங்களை பெற்றுக்கொண்டு உரிமம் வழங்கப்பட்டது.

உணவகம், காய்கறிகடை, பழக்கடை உணவுப் பொருள்கள் விற்பனை கடை உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நன்னிலம் வட்ட நுகா்வோா் மன்ற செயற்குழு உறுப்பினா் வி. பாலகுமாரன் அளித... மேலும் பார்க்க

மன்னாா்குடி பெரிய பள்ளிவாசலில் இரு பெரும் விழா

மன்னாா்குடி பெரியபள்ளி வாசல் சாா்பில் மக்தப் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா என இரு பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரிய பள்ளிவாசல் தலைவா் எம். அப்துல் ரஹீம் தலைமை வகித்தாா். செயலா்... மேலும் பார்க்க

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு

திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் த... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகாலை தூா்வார கோரிக்கை

திருவாரூரில், கழிவுநீா் வடிகாலை தூா்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரம், 18-ஆவது வாா்டுக்குள்... மேலும் பார்க்க