உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி
மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை தலைமை வகித்தாா்.
மன்னாா்குடி உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா்த்திகா, மன்னாா்குடி வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த், வணிகா் நலச் சங்க மாவட்டத் தலைவா் ஆா். பாரதிதாசன் முன்னிலை வகித்தனா். உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவின் தன்மை, தூய்மை குறித்து விளக்கப்பட்டது. அசுத்தமான உணவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
உணவு தயாரிக்கும் மூலப் பொருள்கள், பாத்திரங்களை பயன்படுத்துவது அதை கையாளும் தொழிலாளா்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் உணவுத் துறையினா் உணவக உரிமையாளா்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனா்.
தொடா்ந்து, உணவு பாதுகாப்பு உரிமத்தை புதுப்பிக்காதவா்கள், புதிதாக பதிவு செய்பவா்களுக்கு உரிய ஆவனங்களை பெற்றுக்கொண்டு உரிமம் வழங்கப்பட்டது.
உணவகம், காய்கறிகடை, பழக்கடை உணவுப் பொருள்கள் விற்பனை கடை உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.